சந்திரிக்காவை பார்க்க முடியவில்லையே..! சத்தம்போட்ட பெண்கள்
ஏன் சத்தம் போடுகின்றீர்கள்? என கூட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கேள்வி கேட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த கேள்வியை கேட்டுள்ளார்.
நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், 'ஏன் இப்படி சத்தம் போடுகின்றீர்கள்' என கூட்டத்தில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து கேட்டுள்ளார்.
இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பதிலளித்த போது, “உங்களை (சந்திரிகாவை) சரியாக பார்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து பேசிய சந்திரிகா, 'என்னை பார்க்க வேண்டும் என்பதில்லையே? என்னை நீங்கள் வேண்டியளவு பார்த்துள்ளீர்கள். சரி நான் முடிந்தளவு சத்தமாக பேசுகின்றேன்' எனக் கூறி தொடர்ந்து உரையாற்றியுள்ளார்.
Post a Comment