Header Ads



விமல் வீரவன்ச இல்லாதது, பெரும் நட்டமாகும் - பசில்

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக, 25ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு விமல் வீரவன்ச எம்.பி இல்லாதது, பெரும் நட்டமாகும் என்று, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.   அதுமட்டுமின்றி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை, தாய் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய நட்டமே என்றும் அவர் குறிப்பிட்டார்.  

 விமல் எம்.பியின் வழக்குக்கு வந்திருந்த அவரிடம், கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.