Header Ads



கொழும்பில் வாரத்திற்கு ஒருமுறையே, ஆர்ப்பாட்டம நடத்த அனுமதி..?

கொழும்பு நகரில் தினமும் நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் தனியான சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு நகரில் வாரத்திற்கு ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த முடியும் என்ற வகையில் புதிய முறைமை ஒன்றை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பிரதமரை சந்தித்து இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே புதிய சட்டத்தை கொண்டு வருவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளின் இந்த கோரிக்கை சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்பு பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

No comments

Powered by Blogger.