Header Ads



வசீம் தாஜூடீன் கொலை, உண்மையான குற்றவாளிகளை கைது செய்க - அனுர சேனாநாயக்க


பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுமாறு முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றவாளி கூண்டில் இருந்தவாறு விசேட கருத்து வெளியிட்ட அனுர சேனாநாயக்க,

தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுமாறு தான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபரான அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் டொஸ்கி இன்று உத்தரவிட்டார்.

இதேவேளை, முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்ய போதுமான சாட்சியங்கள் இருக்கும் போது ஏன் அவர் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.