Header Ads



உயிருள்ள மீனை தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி


இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடிபோதையில் தன்னை மறந்த நிலையில் இருந்த இந்த 45 வயது சீன நபர், உயிருடன் இருந்த சிறிய கெளுத்தி மீன்கள் (அல்லது குளத்து மீன்) இரண்டை தனது ஆசனவாய்க்குள் புகுத்தினார். துரதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஒன்று நீந்திச் சென்று அவரது குடலுக்குள் புகுந்துகொண்டது.

இதையடுத்து தாங்க முடியாத வயிற்றுவலி, அதீத உடல் உஷ்ணம், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரது உடல் நிலையையும் நடந்த சம்பவத்தையும் அறிந்துகொண்ட வைத்தியர்கள் அவரை உடனடியாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். பின்னர், அவரது உடலுக்குள் செலுத்தப்பட்ட இரண்டு மீன்களையும் வெளியேற்றினர். 

குடலுக்குள் சென்ற மீன் சுமார் இருபத்து நான்கு மணிநேரத்துக்கு மேல் உடலுக்குள் இருந்தபோதும், இன்னும் சற்று மேலே சென்றிருந்தால், அவருக்கு உயிராபத்து கூட நிகழ்ந்திருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

Powered by Blogger.