தாய்மார்களுக்கு எதிரான கொடுமை தொடருகிறது - அரசியல்வாதியின் செயலாளரே இப்படியென்றால்..?
பிரதி அமைச்சரின் செயலாளர் ஒருவர் தனது 83 வயதான தாயை நடுவீதியில் விட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த வயோதிப தாயை பன்னிபிட்டிய, மொரகெட்டிய பிரதேசத்தில் கைவிட்டுச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பௌர்ணமி தினத்தன்று இரவு, தனது மூத்த மகன் தன்னை கைவிட்டு சென்றதாக 83 வயதுடைய தாயார் ஒருவர் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மூன்று பிள்ளைகளுக்கு தாயான அவர் பல கஷ்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை வளர்த்தததாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரண்டு மகன்மார்களும் பொலிஸ் நிலைத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment