Header Ads



பிரபாகரன் தெய்வமாக்கப்பட்டுள்ளார், சிங்கள இனம் இரண்டாக பிளவடைந்துள்ளது - கோத்தா வேதனை

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெய்வமாக்கப்பட்டுள்ளார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்பாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக வலையமைப்புக்கள் ஊடாக பிரபாகரன் தெய்வமாக்கப்பட்டுள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

பிரபாகரனுக்கு எதிராக குரல் கொடுக்கும் எவரும் சமூக ஊடக வலையமைப்புக்களில் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், படையினரையும் என்னையும் கள்வர்கள் கொலைகாரர்களாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

சிங்கள இனம் இரண்டாக பிளவடைந்து வாதம் செய்வது வருத்தமளிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான பொறுப்புக்களை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.