Header Ads



காத்தான்குடி சகோதரியின் ஜனாஸா, குவைத்தில் நல்லடக்கம்

குவைத்தில் வபாத்தாகி  உறவினர்களை தேடிக் கொள்ள முடியாது ஒரு மாதத்துக்கு மேல் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த சகோதரியின் மையம் பற்றிய அறிவிப்பை  ஊடகம் மூலம் அறிந்து கொண்ட  அவரது கணவர் அதற்கு உரிமை கோரி பூதவுடலை குவைத் நாட்டில் அடக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (7-பெப்ரவரி) காலை 11. 00 மணியளவில் குவைத் , தஹர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் :

வெளி நாடுகளுக்கு வருபவர்கள் தயவு செய்து தனது கடவுச்சீட்டில்(Passport ) கேட்கப்பட்டிருக்கும் முகவரி விபரங்களை பூர்த்தி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நிலைமைகளின் போது அறியப்படுத்த வேண்டியவரது தகவல்களையும் கட்டாயமாக பதிவு செய்யுங்கள் .

--ஹரீஸ் ஸாலிஹ் 

No comments

Powered by Blogger.