Header Ads



புட்டினின் அழைப்பில், நாளை ரஸ்யா பறக்கிறார் மைத்திரிபால


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விசேட அழைப்பிற்கு அமைய, ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 24ம் திகதி வரையில் ஜனாதிபதி ரஸ்யாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலாத்துறை, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமைச்சர்களான எஸ்.பி நாவீன்ன, ஜோன் அமரதுங்க மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.

No comments

Powered by Blogger.