Header Ads



ந‌ல்லாட்சி அர‌சின், உச்ச‌க்கட்ட முஸ்லிம் விரோத‌ப் போக்கு..!!

க‌ரிம‌லையூற்று ப‌ள்ளிவாய‌லை உடைத்து விட்டு அந்த‌ இட‌த்தை இராணுவ‌த்துக்கு உரிமையாக்கும் வ‌ர்த்த‌மாணியும், வ‌ட‌மாகாண‌ அக‌தி முஸ்லிம்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ வாழ்விட‌ங்க‌ளை காடு என‌ அறிவிக்கும் வ‌ர்த்த‌மாணிக்கு ஜ‌னாதிப‌தி ஒப்ப‌மிட்டுள்ள‌மையும் ந‌ல்லாட்சி அர‌சின் மிக‌ உச்ச‌ முஸ்லிம் விரோத‌ப்போக்காகும் என‌ உல‌மா க‌ட்சி க‌ண்ட‌ன‌ம் தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சித்த‌லைவ‌ர் க‌லாநிதி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,

க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ அர‌சில் ந‌ட‌ந்த‌ சில‌ த‌வ‌றுக‌ளுக்காக‌ மைத்ரி ர‌ணில் அர‌சை கொண்டு வ‌ந்த‌ முஸ்லிம்க‌ள் இன்று மிக‌ மோச‌மான‌ நிலைக்குள் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். க‌ட‌ந்த‌ தேர்த‌லின் போது உல‌மா க‌ட்சி மிக‌த்தெளிவாக‌ சொல்லிய‌து முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌வுட‌ன் பேசி அவ‌ரை ஆத‌ரிப்ப‌தே ந‌ல்ல‌து என்று கூறிய‌துட‌ன் அப்ப‌டித்தான் மைத்திரியை ஆத‌ரிப்ப‌தாயின் முஸ்லிம்க‌ள் ஒன்றுபட்டு முஸ்லிம்க‌ளுக்காக‌ மைத்திரியுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்து ஆத‌ர‌வ‌ளிக்கும்ப‌டி பொறுப்புள்ள‌ க‌ட்சி என்ற‌ வ‌கையில் ச‌மூக‌த்துக்கு கூறினோம்.

ம‌ஹிந்த‌வின் ஆட்சியில் சில‌ த‌வ‌றுக‌ள் ந‌ட‌ந்த‌ போது நாம் அத‌னை எதிர்த்து நின்றோம். ஆனால் தேர்த‌ல் வ‌ந்த‌ போது ந‌ல்லாட்சி கூட்ட‌ணி என்ப‌து இன‌வாத‌ ர‌ணில், ஹெல‌ உறும‌ய‌, முஸ்லிம்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ பேசாத‌ மைத்ரி கூட்ட‌ணி என்ப‌து ம‌ஹிந்த‌வை விட‌ மிக‌ மோச‌மான‌து என‌ கூறினோம். 

எம்மை பொறுத்த‌ வ‌ரை சுய‌ந‌ல‌னை சிந்திக்காம‌ல் ச‌மூக‌த்துக்கான‌ எம‌து அர‌சிய‌ல் க‌ருத்துக்க‌ள் ம‌ற்றும் செய‌ற்பாடுக‌ள் மூல‌ம் உல‌கில் வெற்றி கிடைக்காவிட்டாலும் ம‌றுமையில் வெற்றி கிடைக்கும் என்ற‌ உறுதியான‌ எண்ண‌த்தில் செய‌ற்ப‌டுப‌வ‌ர்க‌ள் என்ப‌தால் நாம் எச்ச‌ரித்த‌வை இன்று உண்மைக‌ளாகிக்கொண்டிருக்கின்ற‌ன‌. 

க‌ரிம‌லைப்ப‌ள்ளி ம‌ஹிந்த‌ அர‌சில் சேத‌முற்ற‌தால் அங்கு தொழுகை த‌டுக்க‌ப்ப‌ட்ட‌ போது அத‌‌ற்கெதிராக‌ உல‌மா க‌ட்சி குர‌ல் எழுப்பியத‌ன் கார‌ண‌மாக‌ அந்த‌ப்ப‌ள்ளியை உடைப்ப‌து த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌து. இப்போது அத‌னை முற்றாக‌ உடைத்துத‌ள்ளுவ‌த‌ற்கு ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும் அனும‌திய‌ளித்துள்ள‌ன‌ர். 

உண்மையில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ சிற‌ந்த‌ ஜ‌ன‌நாய‌க‌  அர‌சிய‌ல்வாதியாகும். ம‌க்க‌ள் உல‌மா க‌ட்சிக்கு அதிகார‌ம் த‌ந்திருந்தால் நிச்ச‌ய‌ம் எம்மால் ம‌ஹிந்த‌விட‌மிருந்து ப‌ல‌ உரிமைக‌ளை பெற்றுத்த‌ந்திருக்க‌ முடியும். ம‌க்க‌ள் ஆத‌ர‌வு எம‌க்கு இல்லாத‌ நிலையிலும் நாம் சில‌ உரிமைக‌ளை ம‌ஹிந்த‌ மூல‌ம் பெற்றுத்த‌ந்துள்ளோம். அத்த‌கைய‌ த‌லைவ‌ரை முஸ்லிம் ச‌மூக‌ம் க‌ண் மூடித்த‌ன‌மாக‌ ஒதுக்கி விட்டு இன்று த‌லையில் கை வைத்து ஒப்பாரி வைக்கிற‌து.

அன்று நாம் ம‌ஹிந்த‌ ப‌ற்றி பேசும்போது நீங்க‌ள் யார் ? எம் பியா, ம‌க்க‌ள் பிர‌திநிதியா என்றுதான் முட்டாள்த‌ன‌மாக‌ ப‌ல‌ரும் எம்மை நோக்கி கேட்டார்க‌ளே த‌விர‌ எம‌து க‌ருத்துக்க‌ளில் உண்மை இருக்கிற‌தா என ஆராய‌வில்லை. 

ஆக‌வே ந‌ல்லாட்சி அர‌சின் மேற்ப‌டி முஸ்லிம் விரோத‌ செய‌ல்க‌ளை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து.

3 comments:

  1. முபாரக் மௌலவி சொல்வதுபோல் நாங்கள் ஏமாந்து விட்டோமாவன எண்ணத்தோன்றுகிறது. முஸ்லீம் தலைவர்களே சற்று சிந்திப்பேர்களா?

    ReplyDelete
  2. நான் அப்பவே சொன்னேன் அந்த MY3 , MR ஐ விடவும் துவேஷம் கொண்டவர். மேலும் இந்த ஆட்சி வர உதவியதும் இஸ்லாமிய விரோதிய மேலைத்தேய அரசியல் வல்லுனர்களும்தான்.
    மேலும MR இன் ஆட்சியில் சீனாவின் ஆதிக்கம்/investment அதிகமாக இருந்ததையும் அமெரிக்கா விரும்பவில்லை.

    எது எப்படி இருப்பினும் இனி இனத்துவேஷம் , முஸ்லிம்களுக்கு எதிரான் வன்முறைகள் அதிகரிக்குமல்லாமல் குறையப்போவதில்லை.
    இவற்றையெல்லாம் எதிர்கொன்று வெற்றி பெற ஒரே வழி முஸ்லிம்கள் ஒன்றுபடுவது மட்டுமே.

    ReplyDelete
  3. If the message is TRUE.. May Allah Destroy the current leaders, who permitted or keep silent on theses issues related to Srilankan Muslim Citizens.

    Let us raise our hands toward sky and ask Allah to punish them in suitable manner soon.

    ReplyDelete

Powered by Blogger.