முஸ்லிம் அரசியலின் சீரழிவு நிலை
-விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்-
முஸ்லிம் அரசியல் அரங்கில் தற்போது இடம்பெறுகின்ற நிகழ்வுகள் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. தனி நபர்களின் விவகாரங்களையும் அவர்களது நலன்களையும் வாக்குறுதி மீறல்களையும் மையப்படுத்தியதாகவே முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் அமையப் பெற்றுள்ளன.
ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதும் அதற்கு விளக்கமளிப்பதும் அதற்காக எதிரெதிர் கூட்டங்கள் நடத்துவதும் என முஸ்லிம் அரசியல் வேறொரு தளத்தில் தடம்மாறிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தமாகும்.
குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சிக்குள் எழுந்துள்ள உட்பூசல் இன்று சந்தி சிரிக்கும் நிலையை எட்டியிருக்கிறது. ஒரு சாரார் தலைவரின் கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரசாரம் செய்து வருகின்ற நிலையில் மற்றொரு சாரார் கட்சியைக் காப்பாற்றுதல் என்ற போர்வையில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவற்றுக்கு நடுவே தான் எதையுமே கண்டுகொள்ளப் போவதில்லை என்ற பாணியிலும் நான் அப்படித்தான் இருப்பேன் என்ற தொனியிலும் கட்சித் தலைவரின் கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன.
மறுபுறம் முஸ்லிம் காங்கிரஸுக்கு வெளியே உள்ள அதன் எதிர்த் தரப்புகள் தமது வாய்க்கு அவல் கிடைத்தது போன்று இந்த விவகாரங்களைப் பேசுபொருளாக்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக மேற்சொன்ன தரப்புகளின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தங்களில் வெளியிடும் கருத்துக்களும் பிடிக்கும் சண்டைகளும் மிகவும் மோசமான முறையிலும் இஸ்லாமிய வரையறைகளை மீறுவதாகவும் அமைந்துள்ளமை கவலைக்குரியதாகும்.
அல்குர்ஆனை யாப்பாகக் கொண்ட அரசியல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இலங்கையின் தனித்துவ முஸ்லிம் அரசியல் முற்றிலும் அல்குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமான முறையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு அக் கட்சிகளின் உறுப்பினர்களே இன்று சாட்சி பகர்கிறார்கள்.
அண்மையில் மு.கா. தலைவருக்கு அக் கட்சியின் உயர்பீட உலமாக்கள் எழுதிய கடிதம் ஒன்றில் தமது கட்சியின் பிரதிநிதிகள் இஸ்லாமிய ஷரீஆ வரம்புகளை மீறும் வகையில் செயற்படக் கூடாது என்பதை தெளிவுபடுத்தியிருந்தமை இதற்கு சான்றாகும்.
எனினும் துரதிஷ்டவசமாக முஸ்லிம் அரசியலின் போக்கு சமூகத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அறவே இல்லாமல் செய்வதாகவே அமைந்துள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பதவிகள் , தனிப்பட்ட நலன்கள், தமது குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் என ஒட்டுமொத்தமாக சுயநலன் கொண்டதாகவே தமது செயற்பாடுகளை அமைந்திருப்பது முஸ்லிம் அரசியலுக்கே பெரும் சாபக் கேடாகும்.
இன்று முஸ்லிம் சமூகம் முன்னரை விடவும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் ,எல்லை நிர்ணயம் , தேர்தல் மறுசீரமைப்பு, பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரதான தேசிய அரசியல் நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் அவை பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது மேற்சொன்ன விடயங்களின்பால் முஸ்லிம் சமூகத்தின் கவனம் திசை திருப்பப்பட்டிருக்கின்றமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
எனவேதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது குடுமிச் சண்டைகளை ஒருபுறம் வைத்துவிட்டு சமூகத்தின் நலன்களுக்காக பாடுபட முன்வர வேண்டும். அதற்கான அழுத்தங்களை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் சிவில் சமூக சக்திகளும் வழங்க வேண்டும்.
வெறுமனே தலைமைகள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகின்ற குருட்டு ஆதரவாளர்களாக நாம் இருப்போமானால் நாளை அதற்காக இறைவனிடம் அனைவருமே பதில் சொல்ல வேண்டி வரும் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.
Islam taught us how to make decisions, in family level and as community level. This Masoora method not been used when a decision making process. This is the big calamity our society.
ReplyDeleteEven our beloved prophet SAWS do musawarah ( mash pots) even though he get allah revelation (wahi).
Our society even all levels, we have used to take under them carpet decisions.
This must be the hot topic in Jumna Bayans to educate the society and give warnings to not to adhere the Islamic teaching.
இவர்களுக்கு சூடு,சாேறன,எதுவுமே இல்லை. பணத்தின் மீது குறியாக இருக்கின்றனர்.
ReplyDeleteஇவர்கள் குர்ஆன்,ஹதிஸ் வழி நடந்தது இருந்தாள் பிற கட்சிகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கலாம்.
இலங்கை 8% முஸ்லீம்களின் அரசியல் அவலம் முஸ்லிம் அரசியலின் தோற்றமே.
ReplyDeleteமு கா வும் 10 ட 11 அவ்வளதான்!
ReplyDeleteஅங்கே குர்ஆன் தான் யாப்பு!
ஆனால் குடிவாய் அபேட்சகன்!
அங்கே பொம்பில பொருக்கி அபேட்சகன்
பிரதேஷவாதம் பதவிப் போராட்டம் காட்டிக்கொடுப்பு, கூட்டியும் கொடுப்பு?
புற்றுநோய் முழுசா பரவுனால் சாகவிடுங்கள் அந்த கட்சியை!
மாற்று அரசியல் பலத்திற்காய் போடப்பட்ட வெற்று விளம்பரங்கள்!
கோஷங்கள் மாறலாம் கோமாளிகள் மாறவில்லை!
உறவுகளே! காட்டிக கொடுக்கும் தேவையான போது பக்கவாதம்பிடித்த இவர்களை தூக்கி எரியுங்கள்! யார் வேளைசெய்வான் என பார்த்து இனி பா ம அனுப்புவோம்