Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக பாரிய, தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் - மஹிந்த

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஏதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் நாடு முழுவதும் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்படவுள்ளன. இதன்மூலம் பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 25ம் திகதி காலியில் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த எதிர்ப்பு மக்கள் பேரணியை நாடு முழுவதும் செயற்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் பேரணிக்கு ஆதரவு வழங்குவதற்காக நாடு முழுவதும் மக்கள் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மன வருத்தத்தில் உள்ள மக்கள் இன்று அரசாங்கத்தை விட்டு தூர செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கம் மக்களுக்காக எவ்வித நல்லவிதமான வேலைகளையும் செய்யவில்லை.

எதிர்வரும் 25ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்படுகின்ற எதிர்ப்பு கூட்டங்களில் நாங்கள் அரசாங்கத்திற்கு சிறந்த பாடம் ஒன்றை கற்பிப்போம் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மறந்து போயிருக்கும் மஹிந்த காலத்து அநீதங்களை மக்கள் ஞாபகப் படுத்திக்கொள்ள ஓர் சந்தர்ப்பம் மட்டுமே இது!

    அழுத்கமை மனங்களை ஆற்றாத வரை மாற்று வழி இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.