திஸ்ஸ அத்தநாயக்கவை, கட்டித்தழுவி சுகம் விசாரித்த கபீர் ஹாசீம்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீளவும் கட்சியில் இணைந்து கொள்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகளின் போது சாட்சியாளராக கபீர் ஹாசீம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கட்சியில் மீளவும் இணைந்து கொள்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வழக்கு விசாரணைக்களுக்கான நீதிமன்ற வளாகத்திற்கு வந்த திஸ்ஸ அத்தநாயக்கவை, கபீர் ஹசிம் கட்டித் தழுவி சுகம் விசாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இருவரும் மிகுந்த நட்புடன் பேசிக் கொண்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
Birds of a feather flock together.
ReplyDeleteVekkam kettawanuhal
ReplyDelete