'தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை, இன முரண்பாடுகளுக்கு காரணமாக அமையும்'
-விடிவெள்ளி-
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தீர்க்கப்படாது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டால் அது இன முரண்பாடுகளுக்கு காரணமாக அமையும். அதனால் இரு தரப்பினரும் இப்பிரச்சினையை சமாதானமாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தீர்க்கப்படாது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டால் அது இன முரண்பாடுகளுக்கு காரணமாக அமையும். அதனால் இரு தரப்பினரும் இப்பிரச்சினையை சமாதானமாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். பிரச்சினையை சமாதானமாகத் தீர்த்துக் கொள்ள எனது முழு ஆதரவினையும் வழங்குவேன் என தம்புள்ளை விகாரா திபதி ஸ்ரீ ராஹுல தேரர் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு காணி வழங்கப்படக்கூடாது என்று தம்புள்ளையில் பெரும்பான்மை இனத்தவர்களால் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருவது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தீர்க்கப்படாததால் புனித பூமி அபிவிருத்தித் திட்டங்களும் தடைப்பட்டுள்ளன. எனவே பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.
இதேவேளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்வதற்கு பள்ளிவாசல் தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபைக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க 20 பேர்ச் காணி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஆனால் பள்ளிவாசல் தரப்பு 80 பேர்ச் காணியை வேண்டி நிற்கிறது. இப்பிரச்சினையையும் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.
தம்புள்ளையில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஏனைய சமூகத்தினருடன் சமாதானமாக சகோதர மனப்பான்மையுடனேயே வாழ விரும்புகிறோம். இதனால் பிரச்சினைகள் சமாதானமாக கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகம் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்தால் அது புனித பூமி அபிவிருத்திக்குப் பாதிப்பாக அமையலாம் என்றார்.
பெரும் பான்மை எதுவரை
ReplyDelete