Header Ads



வக்பு சபைத் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல், பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு எதிராக சி.ஐ.டி. இல் முறைப்பாடு

சில பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்கள், நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் வக்பு சபைத் தலை­வ­ருக்கு எதி­ராக தொலை­பே­சி­யூ­டாக மிரட்­டல்கள், அச்­சு­றுத்­தல்கள் விடுத்து வரு­வது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு (சி.ஐ.டி.) முறைப்­பாடு செய்­யப்­ப­ட­வுள்­ளது.

அச்­சுறுத்தல் விடுக்­கப்­பட்ட தொலை­பேசி மற்றும் அலை­பேசி இலக்­கங்­களை சி.ஐ.டி. யிடம் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரி­வித்தார். வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்;

‘வக்பு சபை பள்­ளி­வா­சல்­களின் வக்பு சொத்­து­களில் நடை­பெறும் ஊழல்கள், நிதி மோச­டிகள் மற்றும் நிர்­வாகப் பிரச்­சி­னைகள் பற்றி விசா­ர­ணை­களை நடத்தி வரு­கி­றது. அத்­தோடு வக்பு சொத்­துகள், ஊழல்கள் தொடர்­பாக நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் முறைப்­பா­டுகள் கிடைத்து வரு­கின்­றன.

இவ்­வா­றான முறைப்­பா­டு­க­ளையே வக்பு சபை உரிய முறையில் விசா­ரித்து வரு­கின்­றது.

இவ்­வாறு ஊழல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வாசல் தலைவர்கள் மற்றும் நிர்­வா­கி­களே எனக்குத் தொலை­பேசி மற்றும் அலை­பேசி மூலம் அச்­சு­றுத்தல் விடுத்து வரு­கின்­றனர். தவ­றான மிகவும் மோச­மான வார்த்தைப் பிர­யோ­கங்­களை மேற்­கொள்­கின்­றனர். இத­னா­லேயே நான் இவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை நாடி­யுள்ளேன்.

தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு தவ­றான முறையில் ஏசு­கி­றார்கள். பத்­தி­ரி­கை­களில் எழு­துவோம் என்­கி­றார்கள். ஊழல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் எடுக்­கும்­போது எம்­மீது அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­கி­றது.

வக்பு சபைத்­த­லைவர் மற்றும் உறுப்­பி­னர்கள் சிறிய ஒரு கொடுப்­ப­னவைப் பெற்றுக் கொண்டு தொண்டு சேவை­யையே செய்­கி­றார்கள். இதை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எத்­த­கைய அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டாலும் வக்பு சொத்­து­களில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிராக வக்பு சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். வக்பு சொத்து அல்லாஹ்வின் சொத்து என்பதை பள்ளிவாசல் நிர்வாகங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

ARA.Fareel

2 comments:

  1. May Allah Help you brother Yaseen, if you are truly putting your effort to clean the Masjid administrations from corrupted so called Hajiyars.

    ReplyDelete
  2. இலங்கையில் உள்ள வக்பு சொத்துக்கள் அனைத்தும் ஒருமுகப்படுத்த வேண்டும் .இதன் மூலம் வரும் வருமானங்கள் அனைத்தும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் .

    ReplyDelete

Powered by Blogger.