மஹிந்த தரப்பும் ஜெனீவா செல்கிறது
புலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களை ஜெனிவா மனித உரிமைகள் சபையில் முன்வைப்பதற்கு மகிந்த தரப்பு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற போது இலங்கை இராணுவத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை முறியடிக்கும் நோக்கிலேயே மஹிந்த குழு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் வருகின்ற 13ஆம் திகதி விடுதலைப்புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் தலைமையிலான குழுவொன்று ஜெனிவாவிற்கு கொண்டு செல்லவுள்ளது.
இந்த நிலையில் இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வானது கொழும்பு - தும்புள்ள சந்தியில் அமைந்துள்ள கிராம விமலஜோதி தேரரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவர்களை ஜெனிவாவிற்கு வழியனுப்பி வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று நிரூபிக்கும் ஆதாரங்களும், புலிகள் தான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய போர்க்குற்றச்சாட்டு அறிக்கையை, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள முப்படைகளின் முன்னால் கையளிக்கப்படவுள்ளது.
அத்துடன் அறிக்கையானது ஆராய்ந்து முடிந்தவுடன் அங்கிருந்தவாறே சரத் வீரசேகரவின் தலைமையிலான குழுவினர் குறித்த அறிக்கையுடம் ஜெனிவா நோக்கிப்புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகப்புக்கு செல்ல
கோழிக் கள்ளனும் கூட நின்று உலாவுவதாம்,
ReplyDelete