Header Ads



தம்புள்ளை பள்ளிவாசலை வைத்து, கையொப்பம் சேகரிக்காதீர்கள்...!

-ARA.Fareel-

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை இட­மாற்­றிக்­கொள்­வ­தற்கு தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாகம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அதனால் எந்­த­வொரு அமைப்பும் பள்­ளி­வா­சலை இடம் மாற்­றக்­கூ­டாது என கையொப்­பங்­களை சேக­ரிப்­பதைத் தவிர்க்க வேண்­டு­மென பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது.

முஸ்­லிம்கள் ஏனைய இனத்­த­வர்­க­ளுடன் நல்­ல­ற­வைப்­பேணி வாழ்­ப­வர்கள். அவர்கள் அபி­வி­ருத்­திக்குத் தடை­யா­ன­வர்­க­ளல்ல. சமூ­கத்­தி­னதும், நாட்­டி­னதும் நலன்­க­ரு­தி, அபி­வி­ருத்­திக்கு பங்­கா­ள­ராகும் நோக்­கு­டனே பள்­ளி­வா­சலை இட­மாற்­றிக்­கொள்ளத் தீர்­மா­னித்­துள்ளோம் எனவும் தெரி­வித்­துள்­ளது.

பள்­ளி­வா­சலை இட­மாற்­றக்­கூ­டாது என கையொப்­பங்கள் சேக­ரிப்­ப­வர்கள் அந்த நட­வ­டிக்­கையை உடனே நிறுத்­திக்­கொள்ள வேண்டும்.

இவ்­வா­றான நட­வ­டிக்கை அர­சியல் இலாபம் கரு­தியே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் தெரி­வித்தார்.

ஐக்­கிய சமா­தான முன்­னணி தம்­புள்ளை பள்­ளி­வாசல் அவ்­வி­டத்­தி­லி­ருந்து இடமாற்றப்படக்கூடாது என இரண்டு இலட்சம் கையொப்பங்கள் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

1 comment:

Powered by Blogger.