Header Ads



8 ஆசிரியர் மிருகங்களினால், 2 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட இரத்தப் புற்றுநோயுள்ள மாணவி


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது பள்ளி மாணவியை 8 ஆசிரியர்கள் 2 ஆண்டுகளாக கற்பழித்துவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் அருகே நோஹா என்ற பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியைப் பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மாணவி படிக்கும் தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் 8 பேர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அந்த மாணவியைப் பலாத்காரம் செய்துவந்துள்ளனர். அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த மாணவியை மிரட்டி கடந்த 2 ஆண்டுகளாக இந்த இரக்கமற்ற கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவிக்குக் கொலை மிரட்டல் விடுத்ததால் அந்த மாணவியும் பயந்துகொண்டு போலீசில் புகார் அளிக்கவில்லை. மாணவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து இதுதொடர்பாக பெற்றோர்கள் விசாரித்த போது பெற்றோரிடம் மாணவி கடந்த ஆண்டு உண்மையைக் கூறியுள்ளார்.

அந்த ஆசிரிய மிருகங்கள் வீடியோ எடுத்து வைத்திருந்ததால் மகளின் எதிர்காலத்தையும் படிப்பையும் கருத்தில் கொண்டு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது கர்ப்பமடையும் அளவுக்கு பிரச்னை உருவெடுத்ததை அடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து 8 ஆசிரியர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.