Header Ads



சவுதி அரேபியாவுக்கு சென்ற 6 இலங்கையர்களை காணவில்லை

இலங்கையிலிருந்து சவுதிக்கு சென்ற 6 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரையான காலப்பகுதியில் குறித்த நபர்களை காணவில்லை என அவர்களது உறவினர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்தவகையில் குறித்த நபர்கள் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் நலின் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் 

அக்கரப்பத்தனையைச் சேர்ந்த எம்.எச்.ரிப்னாஸ், 
ரத்கபுரவைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.சுஜஹன், 
கிரியுல்லவைச் சேர்ந்த பி.ஜி.காமனி, 
அதிமலே பகுதியைச் சேர்ந்த கே.பி.கே.சந்திரவதி, 
கல்லடியைச் சேர்ந்த என்.எப்.ரீடா 
கலேன்பிந்துவெவ பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரியாஷ் 

ஆகியோரே என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த நபர்கள் தொடர்பில் சவுதியில் பணிபுரிபவர்கள் தகவல் வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்தவகையில், 011 4379328 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.