3 ராஜபக்ஸக்களும் எங்கே - பாராளுமன்றத்தில் கோஷம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஸ் குணவர்தனவுக்கு, அவை நடவடிக்கைகளின் கலந்துகொள்ள ஒரு வார கால தடைவிதிக்குமாறு, அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் மூன்று ராஜபக்ஷர்களும் பங்கேற்கவில்லை.
இந்த வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு நடத்தப்பட்டது இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பி, முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவில்லை.
அந்த மூவரின் பெயர்களும் கூப்பிடப்படும் போது, அவையிலிருந்து ஆளும் தரப்பினர், கோ... கோ... ( எங்கே... எங்கே... ) என்று கோஷமிட்டனர்.
Post a Comment