Header Ads



சிறுபான்மையினருக்கு எதிராக, தேர்தலை நடத்தப்போவதில்லை - ரணில்

தற்­போது தயா­ரிக்­கப்­பட்­டுள்ள எல்லை நிர்­ணய அறிக்­கையின் பிர­காரம் தேர்­தலை நடத்­தக்­கூ­டாது. பழைய முறை­மை­யி­லேயே தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என சிறு, சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் கூட்­டாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வி­டத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. 

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேரில் சந்­தித்து இவ்­வி­டயம் தொடர்பில் இறுதி முடிவை எட்­டு­வோ­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிறு மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­க­ளி­டத்தில் தெரி­வித்­துள்ளார்.

புதிய எல்லை நிர்­ணய அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளியி­டு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ்­வ­றிக்­கையின் பிர­காரம் தேர்தல் நடத்­தப்­ப­டு­மா­க­வி­ருந்தால் சிறு, சிறு­பான்மை அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்கு பாரிய பாதிப்பு ஏற்­படும் என தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி ஆகி­யன கூட்­டாக கண்­டித்­தி­ருந்­தன.

இந்­நி­லையில் நேற்று திங்­கட்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்­கவை அக்­கட்­க­ளுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய சோஷ­லிச கட்சி ஆகியனவும் இணைந்து விசேட சந்­திப்பை நடத்­தி­யி­ருந்­தன. மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­யன இந்த சந்­திப்பில் கலந்து கொள்­ளாத போதும் அக்­கட்­சி­களும் குறித்த நிலைப்­பாட்­டி­லேயே இருப்­ப­தாக அறி­விப்பைச் செய்­தி­ருந்­தன.

அல­ரி­மா­ளிக்­கையில் மாலை 6.30 மணிக்கு நடை­பெற்ற இச்­சந்­திப்பில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் சார்பில் அமைச்சர் மனோ­ க­ணேசன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்­திரன் 

எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி, ஐக்­கிய சோஷ­லிச கட்­சியின் தலைவர் ஸ்ரீ துங்க ஜய­சூ­ரிய ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இச்­சந்­திப்பு குறித்து அமைச்சர் மனோ­க­ணேசன் தெரி­விக்­கையில்,  பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பின் போது,  தேர்­தலை நடத்­து­வ­தற்கு நாம் எதிர்க்கவில்லை. ஆனால் புதிய எல்லை நிர்­ணய அறிக்­கையின் பிர­காரம் தேர்தல் நடத்­தக்­கூ­டாது. 

அவ்­வாறு நடத்­தினால் அது சிறு மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடும்.

எல்லை நிர்­ணய அறிக்­கையின் பிர­காரம் 70 சத­வீதம் தொகு­தி­வாரி முறை­யி­லான பிர­தி­நி­தித்­துவ தெரிவும், 30 சத­வீதம் விகி­தா­சார வாரி­யான பிர­தி­நி­தித்­துவ தெரிவும் கொண்ட கலப்பு முறையே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனால் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­வங்கள் 6ஆயி­ரத்­தி­லி­ருந்து 11ஆயி­ர­மாக அதி­க­ரித்­தாலும் அது சிறு­பான்மை மற்றும் சிறு அர­சியல் கட்­சி­க­ளுக்கு சாத­க­மாக அமை­யாது.

காரணம் தொகு­தி­களின் சத­வீதம் அதி­க­மாக காணப்­ப­டு­வதால் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வங்­களை சித­றி­வாழும் சிறு­பான்மை மக்­களால் தெரிவு செய்ய முடி­யாது போய்­விடும். 

ஆகவே உட­ன­டி­யாக தேர்­தலை நடத்­து­வ­தாக இருந்தால் பழைய முறையில் அதா­வது முழு­மை­யான விகி­தா­சார பிர­தி­நிதித்­துவ முறையில் நடத்த வேண்டும். 

அவ்­வா­றில்­லாது விட்டால் சிறு மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சி­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டாத புதி­ய­தொரு தேர்தல் முறைமை பிரே­ரிக்­கப்­பட்ட பின்னரே தேர்­தலை நடத்­த­வேண்டும் என நாம் கூட்­டாக வலி­யு­றுத்­தினோம்.

அதனை ஏற்­றுக்­கொண்ட பிர­தமர் குறித்த விடயம் தொடர்­பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறியதுடன் சிறுபான்மை, சிறு அரசியல் கட்சிகளை பாதிக்கும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கப் போவதில்லையெனவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவசரப்பட்டு ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தலை நடத்தப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார் என்றார்.

No comments

Powered by Blogger.