Header Ads



சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம், அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு


இலங்கை மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் நோக்குடன் JMC - International என அழைக்கப்படும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக அனீஸ் ரவூப் (நோர்வே) தெரிவு செய்யப்பட்டுள்ளார்

செயலாளராக ரமழான் (பிரான்ஸ்) பொருளாராக அம்ஜடீன் ரம்ஸான் (டுபாய்) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுன் 9 பேர் கொண்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பானது இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளில் தமது அங்கத்தவர்களை கொண்டுள்ளதுடன், கடந்தவருடம் ஜெனீவா சென்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்கடிகள், வடமாகாண முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குரல் எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மற்றும் இல்லாமல் உலக முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் வெளிக்கொண்டுவரும் ஒரு இனையத்தளமாக இயங்கி வரும் யாழ் முஸ்லிம் டொட் கோம் இனையத்திற்கும் எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.