Header Ads



முஸ்லிம் சமூகம் தனக்­கி­ருக்கும், அச்­சு­றுத்­தல்­களை புரியாது தூங்குகிறது - அமீன் சீற்றம்

முஸ்லிம் கட்­சிகள் தனித்­துவம் என்ற பெயரில் முஸ்லிம் எனும் அடை­யா­ளத்­துடன் முஸ்லிம் சமூ­கத்தின் விட­யங்­களில் மட்டும் அக்­கறை காட்ட முற்­ப­டு­வது விரும்­பத்­த­காத  பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும். நாட்டின் தேசிய விவ­கா­ரங்­களில் நீதி நியா­ய­மான நிலைப்­பா­டு­களை முஸ்லிம் சமூகம் சார் அர­சியல் பிர­தி­நி­திகள் மேற்­கொள்ள வேண்டும் என்­ப­தையே  பெரும்­பான்மை சமூகம் எதிர்­பார்க்­கின்­றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் குறிப்­பிட்டார். 

பேரா­தனை பல்­க­லைக்­க­ழக மெய்­யி­யல்­துறை முன்னாள் தலை­வரும் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலை­வ­ரு­மான  கலா­நிதி எம்.எஸ்.எம். அனஸ் எழு­திய ' முஸ்லிம் அர­சியல் முன்­னோடி- அறிஞர் சித்­தி­லெப்பை' நூல் வெளி­யீட்டு விழா மற்றும் அவர் பற்­றிய ஆவ­ணப்­படம் இறு­வட்டு வெளி­யீடு என்­பன கெட்­டம்பே ஓக்ரே ரீஜன்சி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,   

இன்­றைய அர­சி­யலில்  முஸ்லிம் கட்­சிகள் தனித்­துவம் என்ற பெயரில் முஸ்லிம் எனும் அடை­யா­ளத்­துடன் செயற்­பட்டு வரு­கின்­றன. ஆனால் இக்­கட்­சிகள் தேசிய விட­யங்­களில் அக்­க­றை­யின்றி தனியே முஸ்லிம் சமூ­கத்தின் விட­யங்­களில் மட்டும் அக்­கறை காட்ட முற்­ப­டு­வது எத்­த­கைய பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பது  சிந்­திக்­கத்­தக்­க­தாகும்.

 நாட்டின் தேசிய விவ­கா­ரங்­களில் நீதி நியா­ய­மான நிலைப்­பா­டு­களை முஸ்லிம் சமூகம் சார் அர­சியல் பிர­தி­நி­திகள் மேற்­கொள்ள வேண்டும். இதனைத் தான்  பெரும்­பான்மை சமூகம் எதிர்­பார்க்­கின்­றது. இதற்­கான முன்­மா­தி­ரியை அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்பை முன்­வைத்­தி­ருந்தார். இதனால் அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்பை தனியே முஸ்லிம் சமூ­கத்­திற்­கு­ரி­ய­வ­ராக அன்றி சகல சமூ­கங்­க­ளுக்கும் உரி­ய­வ­ராக கரு­தப்­ப­டு­கின்றார். 

இலங்கை வாழ் முஸ்­லிம்கள் இலங்­கையில் விருந்­தா­ளிகள் போல் வாழ்ந்து விட்டுப் போக முடி­யாது. நாட்டின் பொரு­ளா­தார , சுகா­தார , சூழல் உட்­பட சகல  சமூகப்  பிரச்­சி­னை­க­ளிலும் முஸ்லிம் சமூகம் பங்­க­ளிப்புச் செய்ய முன்­வர வேண்டும். நாட்டின் அபி­மா­ன­மிக்க பிர­ஜை­க­ளாக எம்மைக் காட்ட வேண்டும்.  அறிஞர் எம்.சி.  சித்­தி­லெப்பை சகல மதத்­த­வர்­க­ளு­டனும் இணைந்து செயற்­பட்டார். இதனால் தான் அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்பை பற்றி பேசப்­படும் போது ஆறு­முக நாவலர் , அநா­க­ரிக தர்­ம­பால  ஆகியோர் பற்­றியும் பேசப்­ப­டு­வதைக் காணலாம்.  

முஸ்லிம் சமூகம் 150 வரு­டங்­களின் பின்பு அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்­பைக்கு நன்­றிக்­கடன் செலுத்த முன்­வந்­தி­ருப்­பது கவ­னத்­திற்­கு­ரி­ய­தாகும். கண்டி வாழ் முஸ்­லிம்­களால் மட்­டு­மல்ல இலங்கை முஸ்­லிம்­களால் நினை­வு­ப­டுத்­தப்­பட வேண்­டிய தலைவர் அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்பை ஆவார்.  இலங்­கையின் அர­சி­யலில் முக்­கி­யத்­து­வ­மிக்க மாற்­றங்கள் எதிர்­பார்க்­கப்­படும்  இக்­கா­லப்­ப­கு­தியில் முஸ்லிம் கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் எத்­த­கைய பாணியில் அமைய வேண்டும் என்­பதை அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்­பையின் அர­சி­யலை ஆழ­மாக நோக்­கு­வதன் மூலம் கற்றுக் கொள்ள முடியும். 

இந்­நாட்டின் சகல மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்­கா­கவும் தான்­சார்ந்த முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் உரி­மை­க­ளுக்­கா­கவும் அறிஞர் எம்.சி.  சித்­தி­லெப்பை போரா­டினார்.  அவ­ரது சமூக , அர­சியல்  பங்­க­ளிப்பு காத்­தி­ர­மா­னது. ஆனால் அவ­ருக்கு அர­சி­யலில் உரிய இடம் கிடைக்­க­வில்லை.   இது நடை­முறை அர­சி­ய­லுக்கும் பொருந்தும்.   அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்­பையின் வர­லாற்றைப் பாது­காக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஆனால், முஸ்லிம் சமூகம் துர­திஸ்­ட­வ­ச­மாக தனது வர­லாற்றைப் பேணிப்  பாது­காப்­பதில் அக்­க­றை­யற்­றி­ருப்­பது  கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 

இன்று அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்பை பற்றி முஸ்லிம் மாண­வர்கள் தெரி­யாத நிலை­யி­லுள்­ளனர். அவரின் பெயரில் காணப்­படும் பாட­சா­லையின் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறு­கின்­ற­வர்கள் எம் மத்­தியில் உள்­ளனர். அதேபோல் கலா­நிதி பதி­யுதீன் மஹ்­மூதும் அளப்­ப­ரிய சேவை­யாற்­றினார். ஆனால் இன்­றைய முஸ்லிம் இளைய தலை­மு­றை­யினர் பதி­யுதீன் மஹ்மூத் என்­பவர் யார்? டீ.பி.ஜாயா யார்? என்று கேட்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. நாம் இவர்­களைப் பற்றி இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்துக் கூற வேண்டும்.  

முஸ்லிம் சமூ­கத்தைச் சுற்றி இன­வாதம் வலை பின்னிக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த சமூ­கத்தை அடக்கி ஒடுக்க சதிகள் இடம்­பெற்று வரும் நிலையில் முஸ்லிம் சமூகம் தனக்­கி­ருக்கும் அச்­சு­றுத்­தல்­களை புரிந்து கொள்ள முடி­யாத சமூ­க­மாக தூங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்தின் நிலைப்­பா­டு­களை முன்­வைப்­ப­தற்கு  ஒரு இலத்­தி­ர­னியல் ஊடகம் அவ­சியம்.  

தம்­புள்ள நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­ய­மொன்றில் பேர்கர் பணிஸ் தொடர்­பாக ஏற்­பட்ட சிறு பிணக்கைத் தொடர்ந்து  28 காடை­யர்கள்  98 முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களை மூன்று தினங்கள் மூடச் செய்­தனர். இச்­சம்­பவம் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை மூன்று தினங்கள் முடக்­கி­யது. இது முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு தொடர்­பான அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.  முஸ்லிம் சமூகம் நெருக்­க­டி­களை எதிர்­நோக்கும் சமூ­க­மாக மாற்­றப்­படும் அவல சூழ்­நிலை தொடர்­கின்­றது. இந்­நி­லையில் இருந்து ஒர­ள­வுக்­கேனும் விடு­ப­டு­வ­தற்கு ஊட­கத்தை ஆயு­த­மாக பயன்­ப­டுத்த முடியும். ஆனால் எம்­மத்­தியில் சக்­தி­மிக்க ஊட­க­மொன்று இல்­லாமை பெரும் குறை­பா­டாகும்.  

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யான தலை­வ­ராக அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்பை திகழ்ந்­தார்கள். அவர் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டி­யுள்ளார். இன்­றைய பாரா­ளு­மன்­றத்தில்  21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றனர். ஆனால் சமூ­கத்­திற்­காக இரண்டு அல்­லது மூன்று நிமி­டங்கள் பரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றாத உறுப்­பி­னர்­களும் இருக்­கின்­றனர்.

நாம் கடந்த இரண்­டரை வரு­டங்­க­ளாக 250 மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்­களை பெற்றுக் கொள்ள முடி­யாத நிலையில் இருக்­கின்றோம். இந்த ஆசி­ரிய நிய­ம­னங்கள் ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பிட்ட விடயம் என்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­தாகும்.  எனவே சமூ­கத்­திற்­காக குரல் எழுப்­பக்­கூ­டி­ய­வர்­களை சமூகம் பிர­தி­நி­தி­க­ளாக உரு­வாக்க வேண்டும் என்­பதை அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்­பையின் அர­சியல் வர­லாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றார்.

 (-எம்.எம்.எம்.ரம்ஸீன், இக்பால் அலி )

1 comment:

  1. Muslims' top priority is money ! Is it a new trend ? No,
    it is not but it has become intense due to many reasons.
    Muslim scholars must do a research on the matter and
    start to act on the findings. How would anyone expect
    Muslims who do not follow their religion to follow their
    past leaders ? Today's generation don't know about what
    respects and good manners are ! Even orphans and adopted
    ones are very ungrateful and at times conspicuous and
    evil to their peers and guardians who helped them grow .
    Deep inside ,a section of our community is really wild
    towards everything and we should not ignore the trend.
    The trend has a long history and my personal research
    has not left a single person out of my eyes including
    my parents, teachers , relatives , Ulemmas , friends
    neighbours both Muslims and others and people of
    nearly all walks of life from all three communities
    and on top of that , living experience with world
    powers and some world Arab and non Arab Muslims .
    I may not be alone with such researches but the
    core issue is ,HOW WILL YOU PUT YOUR FINDINGS INTO
    ANY USE OF A COMMUNITY THAT IS NOT INTERESTED IN
    LEARNING AND WANTING A BETTER LIVING STANDARD THAT
    CAN NOT BE BOUGHT ONLY WITH MONEY ?

    ReplyDelete

Powered by Blogger.