Header Ads



களுத்துறை படகு விபத்துக்கான, காரணம் கண்டறியப்பட்டது

களுத்துறை – கட்டுக்குறுந்த படகு விபத்திற்கான காரணம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே  என தென்மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது குறித்த படகில் 41 பேர் பயணித்துள்ளனர்.

இதேவேளை, கட்டுக்குறுந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி தமது கவலையை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறி;பிடப்பட்டுள்ளது.

களுத்துறை, கட்டுகுருந்த படகு விபத்தில்; இதுவரையில் சிறுவர் ஒருவர் உட்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 26 பேர் பேருவள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போன நிலையில் உள்ளதாகவும் இன்றைய தினம் மீண்டும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.