Header Ads



நடிகை பாவனா மீது பாலியல் கொடுமை, இஸ்லாமிய சட்டமே தேவை என்கிறது சினிமா உலகம்

-மு.மு.மீ-

நடிகை பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் மற்றும் அவருடைய நண்பர்கள் பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்றும் அரபு நாட்டில் இருப்பது போல் இந்தியாவிலும் இஸ்லாமிய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மலையாள சினிமா உலகினர் மற்றும் அறிவுஜீவிகள் வெகுவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

தங்களுக்கு பிரச்சினை என்று வரும்போது இஸ்லாமிய சட்டங்கள் தேவை என்று சொல்லும் இவர்கள் மற்ற நேரங்களில் இஸ்லாமிய தண்டனை சட்டத்தை கடுமையாக விமர்சிக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
கொலைக்கு கொலை என்பது இஸ்லாமிய தண்டனை சட்டம்.

சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் இந்த சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு கொலையாளிகளுக்கு பொது இடத்தில் தலையை வெட்டி மரண தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.

கற்பழிப்புக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. திருடினால் கை வெட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு கொடுக்கப்படும் மரண தண்டனையை காட்டு மிராண்டி சட்டம் என்கின்றனர்.

இஸ்லாம் என்பது பிராக்டிக்கலான மார்க்கம் என்பதால் கொலையுண்டவரின் குடும்பத்தினரின் மன வேதனையை போக்கும் வகையில் இஸ்லாமிய தண்டனை சட்டங்களை அல்லாஹ் வகுத்து தந்துள்ளான்.

திருடியவருக்கு கையை வெட்டினால் காலம் முழுவதும் அவரும் திருட மாட்டார். அவரை காண்பவருக்கும் அச்சம் இருக்கும். கை வெட்டப்பட்டவரை கண்டாலே திருடர் என்று பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

இறைவன் வகுத்து தந்த இஸ்லாமிய சட்டத்தை காட்டு மிராண்டி சட்டம் என்று விமர்சித்தவர்கள் இன்று தங்களுக்கு பிரச்சினை என்றவுடன் இந்தியாவிற்கு இஸ்லாமிய சட்டம் தேவை என்கின்றனர்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கக்கூடிய இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 34,651 கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் ஆளக்கூடிய சவூதி அரேபியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 3 கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னரின் பேரரான இளவரசருக்கே மரண தண்டனை என்றாலும் அல்லாஹ்வுடைய சட்டம் யாருக்காகவும் வளையாது என்று தண்டனைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பாவனாவுக்கு மட்டுமல்ல, நிர்பயா, நந்தினி, ஹாசினி, ரித்திக்கா தவ்பிக் சுல்தானா என்று ஒவ்வொரு ஆண்டும் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்படும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்காக இஸ்லாமிய சட்டம் இந்தியாவிற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

9 comments:

  1. இவர்கள் அவுத்து போட்டு ஆடு வதர்க்கு இஹ்லாமிய தண்டனை தேவையைஇல்லைய ?

    ReplyDelete
  2. 1st sollurawangalda thalaya wettanum,,iwangal nenacha rules a konduwaradukkum,,nenacha rules a cancel pannuradukkum islam markam oru play markam illa.

    ReplyDelete
  3. எதோ சில அறிவிலிகள் கருத்து தெரிவித்தார்கள் என்றவுடன் இதை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுகிறீர்கள். ஷரியா சட்டம் என்பது பயங்கரவாதிகளின் சட்டம் . அதை எந்த சந்தர்ப்பத்திலும் ஜனநாயக நாடுகளில் பயன்படுத்தமுடியாது . இருக்கும் சிவில் சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே போதுமானது . தனது இளவரசருக்கு மரண தண்டனை கொடுத்த அதே சவுதி அரேபியாவில்தான் ஐந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மத போதகரான தந்தை இரத்த பணம் (Blood Money ) கொடுத்து விடுதலை ஆனா கொடுமையும் நடந்தது.

    ReplyDelete
    Replies
    1. Kumar check ur story ! U have been reading too many fake news. Blood money is taken by the family so if father killed the daughter is he going to donate money to himself ?

      Delete
  4. MR குமார் அதையே உங்கள் LTTR செய்யும் அய் இதுதான்டா சட்டம் என்று கூவியவர்கள்தானே நீங்கள்?

    ReplyDelete
  5. @VoiceSriLanka:எதாவது கருத்து தெரிவிக்க வேண்டுமானால் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து தெரிவிக்க வேண்டும் . LTTE சட்டம் என்று ஒன்றுமே இல்லை .அதை எப்படி ஷரியா சட்டத்துடன் தொடர்புபடுத்துவது.

    ReplyDelete
    Replies
    1. Mr Kumar Fahyans case actually note rape , it was a case of accessive deciplinery by the parent ,
      If you have read the news you would have known that they didn't find any semens in her body proving that she wasn't sexually assaulted but badly beaten. This was in 2013 a rare case.
      How many Tamils have raped their daughters in Sri Lanka and india ? So stop taking on one case and generalising it.

      LTTE used to give death penalty in their courts. Members are not allowed to smoke or drink !
      They are not even have allowed to have illicit sex ? What is this mean ? Isn't this sharia law ?
      Are you trying to deny or Have you even forgotten that LTTE ever existed ?


      Delete
  6. @VoiceSriLanka: I am not reading fake News or spreading false stories without confirmation. The so called preacher 'Fayhan al-Ghamdi' paid the Blood money to his wife and not to himself. This news was reported in many websites.

    ReplyDelete
  7. What an idiot ur where does it say that Saudi government has allowed such a law agaisnt a 5 year old child ?
    Google and see saudis are happiest people according to a survey and I guess u haven't been to Saudi and ur racist narrow minded purposely don't want to accept that it was a isolated incident.
    When it comes to LTTE ur so called masters even though their rule was to its members it actually implemented to the general public.
    Are you trying to deny that ? Ur an hypocrite

    ReplyDelete

Powered by Blogger.