Header Ads



சீகிரிய மலைக்குன்றில் காணப்படும், மிருகத்தின் கால்கள் தொடர்பில் சர்ச்சை

தம்புள்ளையில் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் சீகிரிய மலைக்குன்றில் காணப்படும் மிருகத்தின் பாதம் சிங்கத்தினுடை யது அல்ல புலியினுடையது என ரங்கிரி - தம்புளை விகாரையின் விகாராதிபதியும் பேராசிரியருமான இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சின்னமாகிய சீகிரிய மலைக்குன்றின் உச்சியில் உள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான வாயின் இரு பக்கத்திலும் மிரு கமொன்றின் இரண்டு பாதங்கள் காணப்படுகின்றன.

இவை சிங்கத்தின் பாதங்கள் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அவை சிங்கத்தின் பாதங்கள் அல்ல புலியின் பாதங்கள் என்று ஸ்ரீ சுமங்கள தேரர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் மக்களை மட்டுமன்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஏமாற்றி, அங்கிருப்பது சிங்கத்தின் பாதமென்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. அதனை உரிய திணைக்களம் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மேலும், ராஜமாளிகைக்குச் செல்வதற்கான வாயில் உள்ள மிருகத்தின் கால்களில் தலா மூன்று நகங்களை கொண்ட பாதங்களே உள்ளன.

எனினும், சிங்கத்தின் பாதத்தில் முடிகளுடன் கூடிய நான்கு விரல்கள் இருக்கின்றன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், சிங்கத்தின் பாத அமைப்புக்கும் புலியின் பாத அமைப்புக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. என்னடா இது புது பிரச்சினை புலிக்கும் சிங்கத்துக்கும் நான்கு விரல்கள் தான் உள்ளது அதேநேரம் இரண்டுக்கும் பாதத்தில் முடிகளுடன் தான் காணப்படுகின்றது. எங்கு இருந்து புது பிரச்சினைகளை தேடுகின்றனரோ தெரியாது.

    ReplyDelete
  2. புலியின் காலில் உள்ள மூன்று நகங்கள் முன்னாடியும் ஒரு நகம் சற்றுப்பின்னாடியும் இருக்கும் ஆனால் சிங்கத்தின் நான்கு நகங்களும் சற்று நேராக இருக்கும்.
    சிங்கத்தின் பாத்த்தைவிட புலியின் பாதங்கள் பெரியது. சிங்கத்தைவிட புலி பலம் வாய்ந்ததும்கூட.

    ReplyDelete

Powered by Blogger.