Header Ads



தம்புள்ளையின் தற்போதைய நிலவரம் என்ன..?

தம்­புள்ளை நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான உணவகம் ஒன்றில் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற தாக்குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து தம்­புள்ளை நகரில் பதற்ற நிலை­யொன்று உரு­வா­கி­யுள்­ளது.

சம்­ப­வத்தில் காயங்­க­ளுக்­குள்­ளான உணவகத்தின் முகாமையாளரும் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த மற்றொருவரும் தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இதனையடுத்து தம்­புள்­ளை­யி­லுள்ள அனைத்து முஸ்லிம் கடை­க­ளையும் மூடி­வி­டும்­படி பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த குழு­வொன்று அழுத்­தங்கள் பிர­யோ­கித்­ததால் தம்­புள்ளை நக­ரி­லுள்ள அனைத்து முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், ஹோட்­டல்கள் என்­பன நேற்­று­முன்­தினம் மாலை 7.00 மணி­முதல் இச்­செய்தி எழுதும் வரை மூடப்­பட்­டுள்­ளன.

ஒருசில முஸ்லிம் கடை­களை உரி­மை­யா­ளர்கள் நேற்று காலை திறந்­த­போதும் குறிப்­பிட்ட குழு­வினர் கடை­களை மூடி­வி­டும்­படி அச்­சு­றுத்­தி­ய­தை­ய­டுத்து கடைகள் மூடப்­பட்­டன. தம்­புள்ளை முஸ்லிம் வர்த்­த­கர்கள் நிலைமை தொடர்­பாக அமைச்­சர்கள் ஹலீம், ரவூப் ஹக்கீம், பௌஸி, கபீர்­ஹாஷிம் ஆகி­யோ­ருக்கு அறி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முஸ்லிம் அமைச்­சர்கள் நிலை­மையை தெரி­யப்­ப­டுத்­தி­ய­துடன்,  அமைச்சர் ஹலீம், அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, பொலிஸ் மா அதிபர் ஆகி­யோரைத் தொடர்பு கொண்டு தம்­புள்­ளையில் அசம்­பா­வி­தங்கள் நிகழா வண்ணம் பாது­காக்கும்படியும் முஸ்லிம் கடை­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கும்­ப­டியும் வேண்­டி­யுள்ளார்.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத்­சா­லியும் பொலிஸ்மா அதி­பரைத் தொடர்­பு­கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­மாறு கோரி­யுள்ளார்.சம்­பவம் தொடர்பில் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது;தம்­புள்ளை நகரில் இயங்­கி­வரும் உணவகத்துக்கு பெரும்­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்த பெண்­மணி ஒருவர் தொலை­பேசி மூலம் தனக்கு இரு கிளப் சேன்ட்விச் அனுப்பி வைக்­கு­மாறு தெரி­வித்­துள்ளார்.

குறிப்­பிட்ட உண­வகம் கிளப் சேன்ட்­விச்­சுக்­குப் ­பதிலாக அவ­ருக்கு இரண்டு சப்­ம­ரின்­களை அனுப்பி வைத்­துள்­ளது. இத­னை­ய­டுத்து இரு சப்­ம­ரின்­க­ளையும் உண­வ­கத்­துக்கு திருப்பிக் கொண்­டு­வந்து  தான் கோரியது கிளப்­சேன்ட்விச் எனக்­கூறி மாற்­றித்­த­ரு­மாறு வேண்­டி­யுள்ளார்.உண­வ­கத்தின் ஊழியர், நீங்கள் எப்­போதும் இப்­ப­டித்தான் என்று தெரி­வித்து அதை ஏற்க மறுத்­துள்ளார். பின்பு திரும்பிச் சென்ற பெண் உண­வ­கத்­துக்கு சப்­ம­ரி­னுடன் தனது கண­வனை அனுப்­பி­வைத்­துள்ளார்.

கண­வ­ருக்கும் உண­வ­கத்தின் மனே­ஜ­ருக்கும் வாய்த்­தர்க்கம் ஏற்­பட சப்­ம­ரினை மெனே­ஜரின் முகத்தில் எறிந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இத­னை­ய­டுத்து ஏற்­பட்ட கைக­லப்­பி­லேயே இரு­வரும் காய­ம­டைந்­துள்­ளனர். பின்பு பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த குழு­வொன்றும் அங்­கு­வந்து மனே­ஜரை கடு­மை­யாகத் தாக்­கி­யுள்­ளது. கடு­மை­யான காயங்­க­ளு­டனே அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

நேற்று நண்­பகல் தம்­புள்ளை நகரில் பெரும்­பான்மை இனத்­த­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டம் ஒன்­றி­னையும் நடத்­தி­னார்கள். 

சம்­பவம் தொடர்பில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட இரு­வ­ரையும் கைது செய்து நேற்று தம்­புள்ளை நீதிவான் நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தினர். நீதிவான் சந்­தே­க­ந­பர்கள் இரு­வ­ரையும் எதிர்­வரும் 22 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.தம்­புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி சி.ஐ.விக்­ர­ம­ரத்­னவை தொடர்­பு­கொண்டு சம்­பவம் தொடர்பில் வின­வி­ய­போது, முஸ்­லிம்­களின் கடைகள் தொடர்ந்தும் மூடப்­பட்­டுள்­ள­தா­கவும், நாளை போயா தினமாகையால் அன்றும் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார். 

தம்புள்ளையில் அமைதியான சூழ்நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முஸ்லிம்கள் தமக்கும் தமது வர்த்தக நிலையங்களுக்கும் பாதுகாப்பு பெற்றுத் தருமாறு மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகாரையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ARA.Fareel

10 comments:

  1. அச்சுறுத்தலுக்கு பயந்து பின் வாங்கி நமது உரிமையை விடடுக்கொடுத்தால் இழந்த உரிமையை திரும்பபெருவது கஷ்டமாகிவிடும்.அங்குள்ளவர்களின் உயிரையும் உடைமையையும் இறைவன் பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அங்கே நல்லாட்சி நடக்குதா இல்லாட்டி பீ ஆட்சிநடக்குதா ?

    ReplyDelete
  3. Justice is not punishing both the victim and the attacker !
    Punishing only the attacker is the justice ! A new trend
    is now developing in delivering justice after the incident
    where DAN and Razik were both punished so that the govt
    escapes blame game from majority racist elements ! The
    JUDGE MUST EXPLAIN HOW THE VICTIM , THE MANAGER OF THE
    EATERY IN THIS CASE , SHOULD REACT TO THE ATTACK ,
    before caging him along with the attacker ! JUSTICE
    MUST BE JUSTICE AND NOT POLITICS .

    ReplyDelete
  4. இந்த பிரச்சினையை பார்த்தால் நமது தரப்பு பொறுமை காக்கவில்லை என்பதும் நாட்டின் தற்போதைய நிலை பற்றி கடுகளவும் சிந்திக்கவில்லை என்பதும் தெளிவாக விளங்குகிறது.

    ReplyDelete
  5. Jawfer , Engalai naangale ezatkum eppozume kurai
    sollik kondiruppazal nanmai ezuvum kittividap
    povazillai .

    ReplyDelete
  6. சகோ,,, muzammil நான் குறை காண வில்லை.நம்மவர்லின் செயற்பாடு எவ்வாறு இருந்து இருக்கிறது என்று மேலே உள்ள செய்தியை பார்த்தால் எல்லோருக்கும் புரியும்.நாம் முஸ்லிம் நமக்கு எந்த இடத்தில் யாருடன் எவ்வாறு நடக்க வேண்டும் என்று வேறு யாரும் சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை சகோ,,, நாடு நாறிப்போய் இருக்கிறது அதிலும் விசேடமாக தம்புள்ளை தான் இன வாதத்தின் ஆரம்பம் இதைக்கூட விளங்காமல் ஹோட்டல் உரிமையாளர் நடந்து கொண்டது கேள்விக்குரியாகவில்லையா.சரி அவள் ஓடர் செய்த உணவின் விலை ஒரு இரண்டாயிரம் இருக்கட்டும் ஆனால் இன்று எத்தனை ஆயிரம் செலவு நாடு தழுவிய பயம் நாடு தழுவிய இனவாத பேச்சு இதையல்லாம் பார்க்க வேண்டாமா?சகோ,, எலி அறுக்குமாம் தூக்காதாம் என்று ஒரு பழமொழி.தம்புள்ளை மட்டுமல்ல நாட்டில் நாளா திசையிலும் இருக்கும் வியாபாரிகள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. You are correctly said Mr.mustafa Jawfer I'm with you.

    ReplyDelete
  8. Jawfer,

    Neengal solvazu oru puram unmai , nallazum kooda aanal
    azan marupuram ennavenraal , viyabaaram seiginra yaarume
    thangal vaadikkaiyaalargaludan nalluravaip peniththaan
    nadanthu kolvaargal . Intha vidayaththil Muslimgal migap
    porumaiyudan seyal padupavargal . Anthap porumaiyai
    noakkiththaan kallerinthu kondirukkiraargal vishamigal .
    "kuttak kutta kunibavanum madayan , kuniyak kuniya
    kuttupavanum madayan." Neegal solvathil nichchayam niyayam
    irukkirazu aanaal inthap pirachchinaiyil aththu meeriyazum
    kaadaiththanaththil eedupattazum vaadikkaiyaalaney .
    Muzalil yaarchari yaarpilai enru theduvom . Azan pinbu
    anugumuraiyai innum evvalavu thooram virivaakkalaam enru
    paarkkalaam allavaa . NAADU NAARIPPOAI IRUKKIRATHU
    ENRA UNGAL KOOTRUDAN NAAN SANDEGAMINRI
    UDANPADUGIREYN.MUSLIM MUDINTHALAVU
    PORUMAIYAAGA POGA VENDUM ENPAZILUM
    ENAKKU POORANA UDANPAADU
    AANAAL MUSLIMGALUM PORUMAI IZHAKKAK
    KOODIYA KATTANGAL NIRAIYAVEY VARALAAM.
    ENENRAAL NAATIL KALVIYIL MIGAVUM
    KEEL MATTATHTHIL IRUPPAVARGAL NAAMTHAAN.
    NANRI JAWFER.

    ReplyDelete

Powered by Blogger.