Header Ads



சசிகலா குறித்து, ரஞ்சன் ராமநாயக்கா

இலங்கை சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்க. இவர் அந்நாட்டின் பிரதி (இணை) அமைச்சர் ஆவார். கேகாலை நகரில் ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய கூட்டத்தில் ரஞ்சன் ராமநாயக்க பேசிய போது,

கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் சசிகலா, தனக்கு தலையணை, போர்வை, மின்விசிறி போன்ற சொகுசுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவருக்கு எந்தவித சலுகைகளும் கொடுக்கப்படவில்லை.

இலங்கையில் அவ்வாறெல்லாம் எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தான் சிறையில் அடைக்கப்பட்ட போது, தலையணை கேட்டார். அதுவும் கூட தலைக்கு வைப்பதற்கு அல்ல. மேலும், பல சொகுசுகள் வேண்டும் என்றார். இலங்கையின் நிலை இவ்வாறு தொடர்கிறது.

இந்திய அரசியல்வாதிகளுக்கும் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான். இலங்கையில் கைதாகும் அரசியல்வாதிகளுக்கு சலுகைகள் அளிக்கிறோம்.

எந்த அரசியல்வாதியையும் சசிகலாவைப் போல் நடத்துவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். என்று சசிகலாவைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

1 comment:

  1. Ungalukku Ranjan da veru photos illaya? Allah val safikkappatta photo va kidaithadu?

    ReplyDelete

Powered by Blogger.