Header Ads



புதிய நேரசூசி அறிமுகம் - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

ரயில்வே திணைக்களம் புதிய ரயில்வே நேரசூசி அட்டவணையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

2006ம் ஆண்டின் பின்னர் மாற்றப்பட்டுள்ள நேரத்திற்கு அமைய இந்த நேரசூரி தயாரிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணங்கள் அதிகரிக்க ப்பட்டுள்ளமையினாலும் புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டமையினாலும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. 

தற்சமயம் நாளாந்தம் 396 ரயில்சேவைகளும் 25 ரயில் பஸ் சேவைகளும் இடம்பெறுகின்றன. நேற்று முதல் இது அமுலுக்கு வந்துள்ளது என்று ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரட்ன தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.