Header Ads



புனித அல்குர்ஆன் மீது, சிறுநீர் கழித்­து, தீக்­கி­ரை­யாக்­கி­ய யுவதி

புனித குர்ஆன் பிர­தி­யொன்றின் மீது சிறுநீர் கழித்­த­துடன், அதனை தீக்­கி­ரை­யாக்­கி­யவர் எனக் கூறப்­படும் யுவதி ஒருவர் 6 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கிறார்.

ஸ்லோவாக்­கியா நாட்டின் ருஸோம்­பெரோக் எனும் நகரைச் சேர்ந்த ஷீலா ஸ்மேரே­கோவா எனும் 24 வய­தான யுவ­தியே இவ்வாறு நடந்து கொண்டாரென குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இவர் புனித குர் ஆன் மீது சிறுநீர் கழித்து, பின்னர் அதை தீக்­கி­ரை­யாக்கும் காட்­சிகள் அடங்­கிய வீடி­யோ­வொன்றை இணை­யத்தில் வெளி­யிட்­டி­ருந்தார்.

இவ்­ வீ­டியோ பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய நிலையில், ஸ்லோவாக்­கிய பொலி­ஸாரால் ஷீலா ஸ்மேரே­கோவா அண்­மையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த யுவதி குர்ஆன் என எழு­தப்­பட்ட நூலொன்றை மேற்­படி வீடி­யோவில் காண்­பித்­த­தா­கவும் அது ஒரு குர்ஆன் என பல தடவைகள் கூறி­ய­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மாகும் வரை இந்த யுவதி விளக்­க­ம­றியலில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என பன்ஸ்கா பைஸ்ட்ரிக்கா நகரிலுள்ள விசேட நீதிமன்றமொன்று உத்தரவிட்டது.

தேசத்துக்கும் இனத்துக்கும் அவதூறை ஏற்படுத்தயமை, தேசிய, இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஷீலா ஸ்மேரேகோவா மீது சுமத்தப்பட்டுள்ளன. இவருக்கு 6 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.