Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் கடிவாளம், யார் கைகளில்..?

-எம். ஐ. ஸாஹிர்-

முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை கட்சி என்ற வகையில், குறிப்பாக 1994 க்குப் பிறகு எதிர்க்கட்சி அரசியலில் இருந்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் அக்கட்சி எதிர்கொண்ட பல்வேறு சவால்கள் தவிர்க்க முடியாதவொன்றாகவே மாறிவிட்டன. முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்வாதிகள் மாத்திரமல்ல முஸ்லிம் காங்கிரஸின் வாக்காளர்களுக்கும் மத்தியில் அரசியல் பற்றிய வித்தியாசமான புரிதல்கள் ஏற்பட்டன, ஏற்படுத்தப்பட்டன. 

இத்தகைய பின்னணியைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸில் உட்கட்சிப் பிளவுகள், பேரினவாத கட்சிகளின் சதி முயற்சிகளில் கட்சி சிக்கிக் கொள்வதானது மாமூல் அரசியல் கட்டமைப்பில் தவிர்க்க முடியாதது என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவு இருத்தல் அவசியமாகும்.

இந்தக் கட்சியை அழிக்க வேண்டுமென இங்கு யாரும் முயற்சிப்பார்களாயின் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகவே கருதப்பட வேண்டும். கட்சியில் குறை கண்டு கடந்த காலங்களில் பிரிந்து சென்றோர் அனைவரும் சமூகம் சார் கொள்கையின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பின் கீழ் அல்லவா செயற்பட்டிருக்க வேண்டும். ஆளுக்கொரு தனிக்கட்சி தொடங்க வேண்டியதன் அவசியம்தான் என்ன. இங்கு பிளவுக்கான பிரதான காரணம் சமூகமோ கொள்கையோ அல்ல, அதிகாரம் சார்ந்தது என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இன்று தேர்தலில் தோற்றுப்போன பலர், நானும் ரவுடிதான் என்பது போல் நாங்களும் அரசியலில் தான் உள்ளோம் எனக் காட்டுவதற்காக முஸ்லிம் கூட்டமைப்பின் அவசியம் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்ந்து இவர்களுக்கு கை கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம்தான் என்ன, இந்தக் கட்சியின் செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் எவ்வாறு அமையப் போகின்றன என்பதுதான் முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.

கட்சியொன்றினை வழிப்படுத்துவதில் விமர்சகர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அந்த விமர்சகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதில்தான் விமர்சனத்தின் நேர்மைத்தன்மை அமைந்துள்ளது. இவ்விமர்சகர்கள் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கவனம் செலுத்தி, கட்சியை புதிய உத்வேகத்துடன் பயணிக்கச் செய்வது அவசியமாகும்.

அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் பற்றி விமர்சிப்பவர்களை பிரதானமாக மூன்று வகைப்படுத்தலாம்.

முதலாவது வகையினர், ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதைக்கு ஒப்பானவர்கள். இவர்களுக்கு இந்த கட்சிக்கும் எந்தவொரு நேரடித் தொடர்பு இருக்காது. கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக களத்தில் நின்று செயற்பட்டவர்கள். அதேபோன்று கட்சியின் தலைமைத்துவம் மற்றும் முக்கிய உறுப்பினர்களுடன் தனிபட்ட ரீதியில்  முரண்பாடுகளை கொண்டோரும் இதில் அடங்குவர்.

இவர்களது நோக்கம் கட்சியில் அவ்வப்போது ஏற்படும் முரண்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள கட்சியை விமர்சிக்கத் தொடங்குவர். முஸ்லிம் காங்கிரஸில் ஏற்படும் முரண்பாடுகளில்தான் இவர்களது அரசியல் பிழைப்பு தங்கியுள்ளது. தான் சார்ந்த கட்சியையும் அரசியல்வாதிகளையும் புகழ் பாடும் இவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் விடயத்தில் தூக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல் திடீர் கரிசினை காட்டுவதென்பது கோமாளித்தனமான செயற்பாடுகளாகவே அரசியலில் கருதப்படும். இவர்கள் விடயத்தில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இவர்களது விமர்சனம் நேர்மைத் தன்மையற்றது.

இரண்டாவது வகையினர், கட்சியில் உள்ள தனிநபர்களுக்கு பின்னாலுள்ள அபிமானிகள். இவர்கள் கட்சியையும் விட தாங்கள் விரும்பும்  தனிநபர்களுக்கே விசுவாசமாக இருப்பார்கள். கட்சியில் தாங்கள் விரும்பும் தனிநபர்களுக்கு எதிர்பார்த்த அதிகாரங்கள், வரப்பிரசாதங்கள் கிடைக்காத பட்சத்தில் கட்சிக்கு எதிராக விமர்சிக்கத் தொடங்குவர். சில நேரம் தங்களுக்கு விசுவாசமான தனிநபர்களோடு சேர்ந்து கட்சியை விட்டு வெளியேறி, கட்சியை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கும் துணை போவர்.

சிலநேரம் கட்சியினால் தனிநபர்களுக்கு உண்மையில் பாதிப்புக்கள் ஏற்படுகின்ற போதிலும், அவற்றினை சரிவர கையாளத் தெரியாமல் எதிராளிகளின் மூளைச்சலவைக்கு உட்படக் கூடியவர்களும் இதில் உள்ளனர். இவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் இவர்கள் விடயத்தில் கட்சித் தலைமை கவனம் செலுத்தி அவர்களது மன வேதனைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டியது அவசியமாகும். அதேநேரம் கட்சிக்குள் இருந்து ஆக்கபூர்வமாக விமர்சிப்பவர்களும் உண்டு.

மூன்றாவது தரப்பினர், நேர்மையான விமர்சகர்கள். இவர்களது விமர்சனம் சமூகம் சார்ந்த விமர்சனமாகவே இருக்கும். இருப்பினும், இவர்களுக்கும் இக்கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காது. தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் கூட வாக்களித்தும் இருக்க மாட்டார்கள். கட்சி என்பதை விட சமூகம் என்றே சிந்திப்பர். 

இவர்களது விமர்சனத்தின் பலவீனம் என்பது, நேர்மை என்ற வட்டத்தினுள் மாத்திரம் இருந்து கொண்டு, இத்தகைய மாமூல் அரசியல் சூழ்நிலைகளில் கட்சிக்குள் என்னதான் நடக்கின்றது, எத்தகைய நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேற்றப்படுகின்றன போன்ற விடயங்களில் போதிய தெளிவு இல்லாமல், வெறுமனே ஊடகங்கள் சொல்லும் தகவல்களை மையமாக வைத்து மகான்களுக்கு உபதேசம் செய்வது போல் தொடர்ச்சியாக உபதேசம் செய்து கொண்டே இருப்பர். சிலநேரங்களில் உபதேசம் செய்து களைத்தும் போய், சாபம் இடவும் தொடங்கிவிடுவர்.

இத்தகைய விமர்சகர்கள் உண்மையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த விரும்பின் அவர்கள் கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு விமர்சித்து எதுவும் ஆகப் போவதுமில்லை. அவர்களால்  முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக மாற்று அரசியல் சக்திகளை உருவாக்குவது சாத்தியமுமில்லை. அது நிறைவேறப் போவதுமில்லை. 

இவர்கள் நேர்மையான அரசியல் விமர்சகர்கள் எனில், இவர்கள் கிராம மட்டங்களில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து நேரடி அரசியலின் பங்குதாரர்களாகவும் நாளைய தலைவர்களாகவும் மாறவேண்டும். அப்போதுதான் கட்சியில் ஒட்டி கொண்டிருக்கும் முனாபிக்தன்மை கொண்டவர்கள் ஓரங்கட்டப்பட்டு, திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். சிறந்ததொரு பொறிமுறையைக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் தலைமையும் வழிநடத்தும் ஆற்றல் இத்தகைய விமர்சகர்களுக்கே உண்டு. இவர்கள்தான் கட்சியின் கடிவாளமாக இருப்பார்கள். அதற்கான வாசல் திறக்கப்பட வேண்டும்.

அந்தவகையில், முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி பாதுகாக்கப்பட வேண்டுமாயின் புதிய உத்வேகத்துடனும் தூர நோக்குடனும் செயற்படும் இளைஞர்கள் கிராம மட்டங்களில் இருந்து  கட்சியில் இணைந்து கட்சியின் கடிவாளமாக மாற வேண்டும். அவர்களுக்கான பயிற்சிகளை கட்சி வழங்கி நாளைய தலைவர்களாக அவர்கள் சமூகத்தை வழிகாட்ட வேண்டும். 

6 comments:

  1. மு க பொருத்த மட்டில் திரமையாவர்களுக்கும் ஆழுமைகளுக்கும் அங்கு இடம் இல்லையே.

    ReplyDelete
  2. கட்சியில் உள்ள தவிசாளர் போன்ற உயர்மட்ட அங்கத்தவர்களுக்கே கட்சிக்குள் இடமில்லாத போது புதியவர்கள் வந்து கட்சியை வளர்ப்பது....!!!! சாத்தியமே இல்லாத விடையங்களை பேசுவதை விட்டுவிட்டு சுயநலமற்ற தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. "The Muslim Voice" has NO right to deliberate the internal struggle for power issues of the Sri Lanka Muslim Congress – SLMC. But Minister Rauf Hakeem being a Muslim and also claiming to be a Muslim political leader, “The Muslim Voice” vehemently denounces Rauf Hakeem as a Muslim leader of the Muslim Community of Sri Lanka as by his stooges.The claim made by Minister Rauf Hakeem that the Muslims are united as a political force via the SLMC is FALSE. The Muslims were UNITED politically as one voice during the leadership of late M.H.M. Ashraff. With the advent of Rauf Hakeem becoming the leader of the SLMC, by conspiracy, using “ DEMOCRATIC MEANS TO KILL THE DEMOCRACY “ within the party and planting his stooges with constitutional changes, the SLMC support base (Poraaligal and Pamaramakkal) in the Eastern Province and Muslim populated area. The SLMC support base in the Eastern Province began to erode and finally ended up in the SLMC splitting into the ACMC, National Congress, DUA, Muslim Unit – SLFP and a group leaning with the UNP. The deceptive, dishonest and alleged corruption, including the sale of the Muslim vote bank (SLMC MP’s votes in parliament) of the SLMC to the Mahinda government for a very large amount of money and additional perks, in return to support the controversial 18th Amendment Bill on September 8, 2010, made the Muslims politically frustrated. See what Azad Sally has revealed in his interview with Journalist Faraz Saukathal – “ NEWSLINE – dated todate (http://videos.srilankanspuwath.co.uk/watch/136048-news-line-tv-1-20-02-2017 where Azad Sally reveals shocking details about Rauf Hakeem and Nazeer Ahamed dealing in big collection of kick-back commissions in the Water Board tenders and the supply of petroleum to the government”. While the Muslims supported the “Yahapalana” government, they did not benefit to resolve their economical, employment, development, education and fundamental rights issues by the SLMC or Rauf Hakeem and his team up to now. The Muslims were seen as “POLITICAL ORPHANS”, since the demise of the late M.H.M. Ashraff. In the period ending 2014, the Nationalist Buddhist Monks assault on the Community made the Muslims more frustrated. This led the Muslim community with a vote bank of nearly 800,000 votes to steer clear from “POLITICS” and to ACT AS A UNITED COMMUNITY FORCE that took decisions on its own without any influence or participation of Muslim politicians. The Muslim Community in the run-up to the Presidential elections and the General elections of 20015, ACTED AUTONOMOUSLY. The scenario was that Muslim politicians and political parties were led by the VOTERS and NOT the VOTERS led by the dishonest, deceptive and unscrupulous so-called Muslim politicians including Rauf Hakeem. Rauf Hakeem thus became “PERSONA NON-GRATA” to the TRUST of the Muslims in Sri Lanka, be it the Eastern province or other Muslim populated districts in the other provinces in Sri Lanka. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, EVEN WITHIN THE SLMC, especially from among the YOUTH and the poraalikkal and pamaramakkal, has to emerge to overthrow Rauf Hakemm and his gang, bring back Hassanali and group and face the political challenges through RIGHTFUL legislations and constitutional changes adopted in our favour in the coming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  4. எம் ஐ சாஹிர் அவர்களே, முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சி இப்போது இல்லை, அது ஹகீமினதும் அவரது அடிவருகிகளினதும் காட்சியாகும். அவர்களில் நீங்களும் ஒருவர் என்பதையே இந்த கட்டுரை குறிப்புணர்த்தி நிட்கிறது. முஸ்லீம் காங்கிரசை காப்பாற்ற வேண்டும் என்றால் ஹக்கீம் இந்த கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். முடிந்தால் முயட்சி செய்யுங்கள். அடுத்த தேர்தல் ஹக்கீமுக்கும், அவரது அடிவருடிகளுக்கும் எதிரான தேர்தலாகவே இருக்கும். அதுதான் முஸ்லிம்களின் முதல் கடமையாகும். முடிந்தால் இந்த நோக்கத்தை நிறைவேற்றி கொள்வதட்கு நீங்களும் உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். நிட்சயமாக ஹக்கீமின் கட்சி தோற்கடிக்கப்படும், தோக்கடிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  5. எம் ஐ சாஹிர் அவர்களே, முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சி இப்போது இல்லை, அது ஹகீமினதும் அவரது அடிவருகிகளினதும் காட்சியாகும். அவர்களில் நீங்களும் ஒருவர் என்பதையே இந்த கட்டுரை குறிப்புணர்த்தி நிட்கிறது. முஸ்லீம் காங்கிரசை காப்பாற்ற வேண்டும் என்றால் ஹக்கீம் இந்த கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். முடிந்தால் முயட்சி செய்யுங்கள். அடுத்த தேர்தல் ஹக்கீமுக்கும், அவரது அடிவருடிகளுக்கும் எதிரான தேர்தலாகவே இருக்கும். அதுதான் முஸ்லிம்களின் முதல் கடமையாகும். முடிந்தால் இந்த நோக்கத்தை நிறைவேற்றி கொள்வதட்கு நீங்களும் உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். நிட்சயமாக ஹக்கீமின் கட்சி தோற்கடிக்கப்படும், தோக்கடிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  6. இந்த ஸாஹிர் ஐயோ பாவம். கடந்த காலத்தை திரும்பிப்பார்த்து எதிர்காலத்தை தலைவனின் அதிகாரத்தின் அடிப்படையில் சிந்தித்தால் புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.