Header Ads



UNP யில் முஸ்லிம் பிரிவை, ஸ்தாபிக்க முயற்சி

ஐக்­கிய தேசியக் கட்­சியில் முஸ்லிம் பிரிவை ஸ்தாபிக்கும் முஸ்­தீ­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் மற்றும் மாகாண சபை­களில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யே­யான ஆரம்­பக்­கட்ட சந்­திப்பு நேற்று பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றது. 

வடமேல் மாகாண சபை உறுப்­பினர் எஸ்.சஹாப்தீன், மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஜெ.ஜெய்­னு­லாப்தீன் (லாபிர் ஹாஜியார்), வட­மத்­திய மாகாண சபை உறுப்­பினர் பீ.சயீது சப்­ர­க­முவ மாகாண சபை உறுப்­பினர் நிஹால் பாறூக் மற்றும் மேல்­மா­காண சபை உறுப்­பினர் எம்.எஸ்.எம்.பைறூஸ் உள்­ளிட்டோர் அந்­தந்த மாகா­ணங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி  இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

இலங்கை முஸ்­லிம்­களில் சுமார் 70 வீத­மானோர் ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆத­ரிக்கும் நிலையில் அக்­கட்­சி­யி­னூ­டாக முஸ்­லிம்­களும் சலு­கை­களை பெற்­றுக்­கொள்ளும் பொருட்டே இவ்­வா­றா­ன­தொரு கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தாக வடமேல் மாகாண சபை உறுப்­பி­னரும் குருணாகல் மாவட்ட ஐ.தே.க. அமைப்­பா­ள­ரு­மான எஸ்.சஹாப்தீன் தெரி­வித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், சோல்­பறி திருத்­தத்­திற்­காக 1946 ஆம் ஆண்டு நாட்டில் கட்­சி­யொன்றை உரு­வாக்கும் தேவை ஏற்­பட்­டது. இதன்­போது ரி.பி.ஜாயா தலை­மை­யி­லான அகில இலங்கை இலங்கை முஸ்லிம் லீக், சேர் ராஸிக் பரீத் தலை­மை­யி­லான இலங்கை சோனகர் சங்கம் என்­பன டீ.எஸ்.சேனா­நா­யக்க மற்றும் எஸ்.டபிள்யு பண்­டார நாயக்க போன்­றோ­ருடன் இணைந்து ஐக்­கிய தேசியக் கட்­சியை உரு­வாக்­கினர். அத்­துடன் டி.பி.ஜாயா கட்­சியின் ஸ்தாபக உப தலை­வ­ரா­கவும் சேர் ராஸிக் பரீத் உள்­ளிட்ட இன்னும் பல முஸ்லிம் பிர­தி­நி­திகள் கட்­சியின் செயற்­கு­ழு­விலும் இருந்­தனர். இவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆரம்பம் முதல் இன்­று­வரை இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் செயற்­பா­டுகள் ஐ.தே.க.வுடன் பின்­னிப்­பி­ணைந்­தி­ருந்­தது. 

இந்­நி­லையில் கடந்த சில சந்­தர்ப்­பங்­களில் தேர்தல் காலங்­களில் முஸ்­லிம்­கட்­சி­க­ளுடன் கூட்­டி­ணை­வ­தனால் ஐ.தே.க. ஊடாக முஸ்லிம் பிர­தி­நி­திகள் பெறு­வதில் பல சிக்­கல்கள் ஏற்­பட்­டன. இந்­நி­லையில் இதனை சீர் செய்­வ­தற்கு மாவட்ட ரீதியில் பல வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்ளும் முக­மாக நாம் ஐ.தே.க.வில் ஒரு முஸ்லிம் பிரி­வொன்றை கட்­ட­மைக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுக்­கிறோம். 

ஆரம்­ப­கட்­ட­மாக ஐ.தே.க. பிர­தி­நி­தித்­துவம் பெறப்­பட்­டி­ருக்கும் ஒவ்­வொரு மாகாண சபை­யி­லி­ருந்தும் தலா ஒவ்­வொரு பிர­தி­நி­தி­களை அழைத்து சந்­திப்­பொன்றை மேற்­கொண்டோம்.

அடுத்­த­வா­ர­ம­ளவில் ஐ.தே.க.முஸ்லிம் எம்.பி.க்கள், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கியதாக கலந்துரையாடலொன்றை ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்த தீர்மானித்திருக்கிறோம். அங்கு மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களுக்கமைய எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். 

-விடிவெள்ளி-

No comments

Powered by Blogger.