Header Ads



மஹிந்தவை சந்திப்பதற்கு அனுமதித்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு பிரதான அமைச்சர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு ஒன்றை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்க இந்தச் சந்திப்பு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்துவதோடு, மகிந்த ராஜபக்ச மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. இருவரும் சந்திக்க வேண்டிய காலகட்டத்தில்தான் சு கட்சியின் நிலை இருக்கிறது,இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்ததுபோல் குற்றவாளிகளை பிடித்து உள்ளே தள்ளி இருந்தால் இரண்டு சு கட்சி உருவாக்கி இருக்காது,இப்போது இரண்டாவது சு கட்சி ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வந்து விட்டதால் பழைய கோபதாபங்களை மறந்து புதிய அணியுடன் பழைய அணியான சு கட்சி கட்டாயம் விட்டுக் கொடுத்து போக வேண்டியுள்ளது.சந்தர்ப்பத்தை தவறவிட்டால் எல்லோருடைய நிலையும் இதுதான் ,

    ReplyDelete

Powered by Blogger.