Header Ads



ஞானசாரரை அழைத்தமை, முஸ்லிம்களுக்கு செய்த துரோகம்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அதி­க­ரித்து வரும் அடா­வடித்தனங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்கு உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் வில்­பத்து பிர­தே­சத்தை, வன ஜீவ­ரா­சிகள் வல­ய­மாக மேலும் விஸ்­த­ரிக்கும் உத்­தேச வர்த்தமானி அறிவித்தலை இடை நிறுத்­து­மாறும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடு­வித்­துள்­ளது.

இந் நாட்டில் கடும் போக்­கா­ளர்­க­ளினால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்டு வரும் இன்­னல்கள் தொடர்­பாக நடை­பெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ள­னத்தின் செயற்­குழு கூட்­டத்தில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது.

அதன் தேசியத் தலைவர் பீ.எம்.பாரூக் தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் இது தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் எழுதி நியாயம் பெறப்­பட வேண்டும் என்று ஏக­மன­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்த தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளது. கடி­தத்தின் பிர­திகள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­னா­யக்க ஆகி­யோ­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ள­னத்தின் தேசியத் தலை­வரின் கையொப்­பத்­துடன் அனுப்­பப்­பட்­டுள்ள இக்­க­டித்தில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

* இலங்­கையில் பல பாகங்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள சமூக விரோத, இன­வி­ரோத செயற்­பா­டுகள் நாளாந்தம் அதி­க­ரித்து வரு­வதால் முஸ்­லிம்­க­ளுக்­கி­டையே பதற்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. 93% சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான முஸ்லிம் வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தின் தலைவர் என்ற வகையில் முஸ்லிம் விரோத செயற்­பா­டு­களில் இறங்­கி­யுள்ள அபா­ய­க­ர­மான இந்த கும்­பலை உட­ன­டி­யாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்­து­வது தங்­களின் தலை­யாய கட­மை­யாகும்.

* தங்­களால் ஸ்தாபிக்­கப்­ப­ட­வி­ருக்கும் உத்­தேச தொல் பொரு­ளியல் ஆணைக்­கு­ழு­விற்கு தமிழ், முஸ்லிம் இனங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் இரு அங்­கத்­த­வர்­களை நிய­மிக்­கு­மாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் சிபா­ரிசு செய்­கி­றது.

* யாழ்ப்­பாணம், மன்னார் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளினால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான முஸ்லிம் அக­திகள் புத்­தளம் பகு­தியில் வாழ்ந்து வந்த நிலையில் புனர்­வாழ்­விற்­காக தங்கள் சொந்த இடங்­களில் மீள் குடி­யேற எத்­த­னிக்கும் போது அநா­த­ர­வற்ற அந்த முஸ்­லிம்­களை மேலும் நிர்க்­க­திக்கு உள்­ளாக்­கு­வ­தாக அமை­யப்­போகும் உத்­தேச கெசட் அறிக்­கையை இடை­நி­றுத்­து­மாறும் அவர்கள் அப்­ப­கு­தி­களில் இருந்து மீண்டும் விரட்­டப்­ப­டு­வதை தடுத்து நிறுத்­து­வதை உறு­திப்­ப­டுத்­து­மாறும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் வேண்டிக் கொள்­கி­றது.

* பிர­சித்திபெற்ற நான்கு இலங்கை முஸ்லிம் குடும்­பங்­களைச் சேர்ந்த 32 முஸ்லிம் இளை­ஞர்கள் ஐ.எஸ். இயக்­கத்தில் சேர்ந்­துள்­ள­தாக நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவினால் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யி­டப்­பட்ட ஆதா­ர­மற்ற தவ­றான தக­வல்­களைக் கொண்ட அறிக்­கையை அகில இலங்கை லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது.

தன்னால் கூறப்­பட்ட நான்கு பிர­சித்­தி­பெற்ற குடும்­பத்­தி­னரின் பெயர்­களை வெளி­யி­டு­மாறு நாம் நீதி­ய­மைச்­ச­ருக்கு வேண்­டுகோள் விடு­கின்றோம். இல்­லா­விடில் இக்­கூற்று பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரின் இத­யங்­களில் அனைத்து முஸ்லிம் சமூ­கத்­தையும் பற்­றிய தவ­றான சந்­தேக மனப்­பான்­மையை தோற்­று­விக்கக் கூடிய வாய்ப்பு உள்­ளது.

ஆகையால் முஸ்லிம் சமூ­கத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் நீதி­ய­மைச்­ச­ரினால் பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையை உடன் வாபஸ் பெறு­மாறு அவரை வலி­யு­றுத்­து­மாறும் இன்றேல் அவரை அப்­ப­த­வியில் இருந்து நீக்­கு­மாறும் வலி­யு­றுத்­து­கிறோம். 

தமிழ் முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் இனக்­க­ல­வ­ரத்தைத் தூண்­டு­வ­தற்குச் செயற்­பட்­ட­தாக இனங்­கா­ணப்­பட்ட மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்­காக அர­சியல் மற்றும் பதிவுசார் தொடர்பற்ற ஞானசார தேரரையும் அழைத்துச் சென்ற நீதியமைச்சர் ஞானசார தேரருடன் வைத்திருக்கும் உறவையும் அவரது செயற்பாடுகளையும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனாதிபதியினதும், கபினட் அமைச்சர்களினதும் நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கு முஸ்லிம் விரோத செயற்பாட்டு முக்கியஸ்தராக விளங்கும் ஞானசார தேரரை அழைத்தமை முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் என சம்மேளனம் கருதுகிறது என கூறப்பட்டுள்ளது.     

4 comments:

  1. முன்னாள் ஜனாதிபதிகள் ஆட்சிகாலங்களில் காடு அழிச்சி குடியேற்ற முறைகள் செய்யவில்லையா?பிரேமதாச ஆட்சியில் கம்முதாவ திட்டம் முழுவதும் காடுகள் அழிச்சே மேட்கொள்ளப்பட்ட திட்டங்களாகும் உதாரணமாக வெள்ளவாய,மொனராகலை,மஹியங்கனை பிரதேசங்களில் 1980 -- 1990 காலங்களில்.மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் விமானநிலையம்,துறைமுகம் இன்னும் பல திட்டங்கள்.இவ்வாறு பல பல சிங்கள ராஜாக்களால் செய்யும் போது யாருடைய கண்ணுக்கும் விளங்குவதுயில்லை ஆனால் முஸ்லிம்களின் சொந்த பிரதேசங்களில் மீள் குடியேற்றம் செய்யும் போது மட்டும் தான் சிங்கள இனவாதிகளுக்கு தெரியாது காடு அழிப்பு.

    ReplyDelete
  2. Maithree is a consummate racist.

    ReplyDelete
  3. மைத்திரி நாட்டுமக்கள் எல்லாருக்கும் தான் ஜனாதிபதி.

    ReplyDelete

Powered by Blogger.