Header Ads



7 சிறைச்சாலைகளில் விமல் வீரவன்சவை அடைத்தாலும், யாராலும் அவரது வாயை மூடமுடியாது - மஹிந்த

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சிறைச்சாலையின் ஈ அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விமல் வீரவன்சவின் நலம் விசாரிப்பதற்காக நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

ஒன்றல்ல 7 சிறைச்சாலைகளில் விமல் வீரவன்சவை அடைத்தாலும் அவரது வாயை யாராலும் மூட முடியாதென மஹிந்த ராஜபக்ச இதன் போது ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த,

நான் இது நடக்கும் என முன்னரே கூறினேன். ஏன் என்றால் இவர்களுடைய மாநாடு உள்ளதல்லவா. அதற்கு முன்னர் விமல் கைது செய்யப்படுவார் என நான் அறிந்திருந்தேன்.

கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? வாகனம் தவறாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியமையாகும். தற்போது அனுமதி வழங்கிய பலர் உள்ளனர். அந்த உத்தரவுக்காக தலைவரை கைது செய்ய மாட்டார்கள்.

(அப்போதைய அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆஷு மாரசிங்க - அவர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்). நீதிமன்றம் சுயாதீனம். எனினும் நீதிமன்றத்தை தவறான முறையில் வழிநடத்தியுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. அவரின் வாய் தானே அவருக்கு எதிரி.

    ReplyDelete
  2. Kuraikira nai kadikathu....

    ReplyDelete

Powered by Blogger.