Header Ads



பரீட்சை நிலையங்களுக்குள் ஹிஜாப், அணிவதற்கு தடையில்லை - ராஜித

முஸ்லிம் மாணவிகள்  பரீட்சை நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை.  அப்படியானதொரு சட்டம் நாட்டில் இல்லை. அது அரசின் நிலைப்பாடு அல்ல. முள்ளி பொத்தானை சம்பவத்தை நாம் கண்டிக்கிறோம். அத்துடன் ஆசிரியர்களுக்கும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முள்ளி பொத்தானை சிங்கள பாடசாலையொன்றில் நடந்த சாதாரண பரீட்சை எழுத சென்ற இரு முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப்புடன் பரீட்சை நிலையத்திற்கு வர வேண்டாம்  என கூறப்பட்டுள்ளது.  கிழக்கில் ஆசிரியர் நியமனம் பெற்றவர் ஹிஜாப், பர்தா அணியாமல் சாரியுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    இது அரசின் நிலைப்பாடா? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். 

இதன்போது பதிலளித்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, 

இந்த சம்பவத்தை, நாம் வன்மையாக கண்டிக்கிறோம். வரலாற்றிலிருந்து முஸ்லிம் பெண்கள் இந்த தடையை அணிந்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்கவில்லை. இது அரசின் நிலைப்பாடாகும். இது தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்தார்.

1 comment:

  1. கௌரவ அமைச்சர் தொடர்பில் என்னுள் ஓர் அபிமானம் இருந்தது இப்போதும் ஓரளவு இருக்கின்றது. இருப்பினும் நல்லாட்சி என பெயர் சூட்டிக்கொண்ட இவ்வரசின் ஒவ்வொரு அமைச்சரும் தனித்தனி நிகழ்ச்சி நிரலுக்கமைவாக ...தோன்றித்தனமாக அறிக்கைவிடுவதும் செயலாற்றுவதும் அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருக்கின்றது.
    நியாயம் தொடர்பான அமைச்சர் இன்று(8) பாராளுமன்றத்திலே முன்வைத்த கருத்துக்கள் இவ்வுயர் சபையையே முஸ்லிம்கள் தொடர்பில் பிழையாக வழிநடாத்தியதாய் அமைகின்றது. இருப்பினும் இச்சந்தர்ப்பத்தில் நீங்களோ அல்லது உங்கள் முதன்மை அமைச்சரோ ஏன் அவரை சரியாக திசைமுகப்படுத்த முடியாதுபோனது. இங்குதான் எமது சந்தேகம் வலுக்கின்றது. அதாவது நீங்கள் தனித்தனியாக என்ற போர்வையில் நிழல் நிகழ்ச்சி நிரலில் கூட்டாகத்தான் முஸ்லிம்களுக்கு எதிராகத்தொழிட்படுகின்றீர்கள் என்பதாகவே கருதவேண்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.