Header Ads



முஸ்லிம்கள் என்னை கேவலமாக விமர்ச்சிக்கிறார்கள் - பாராளுமன்றத்தில் விஜேதாச

-MM.Minhaj-

கல­கொட அத்தே  ஞான­சார தேரர் விவ­கா­ரத்தின் கார­ண­மாக   நீதி­ய­மைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும்  இரா­ஜாங்க அமைச்சர்  ஹிஸ்­புல்­லா­ஹ்வுக்கும் இடையில் சபை யில் கடு­மை­யான வாக்குவாதம் ஏற்­பட்­டது.  

அதன்­போது அமைச்சுப் பத­விக்­காக எத­னையும் செய்­வீர்கள் என ஹிஸ்­புல்­லாவை நோக்கி கூறிய நீதி அமைச்சர், எங்­களை நோக்கி தற்­போது கைகாட்ட வேண்டாம் எனவும் கடும் தொனியில் எச்­ச­ரித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை முஸ்லிம் விவ­காரம், தபால்­துறை அமைச்சின் செல­வின தலைப்­பி­லான குழு­நிலை விவா­தத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு  எம்.பி.யோகேஸ்­வ­ரனின் உரையின் போது குறுக்­கிட்டுப்  பேசிய அமைச்சர்  விஜே­தா­ஸவின் உரையை அடுத்தே சர்ச்சை ஏற்­பட்­டது. 

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார  தேரர் கைது செய்­யப்­பட  வேண்டும் என்று யோகேஸ்­வரன் எம்.பி. வலி­யு­றுத்­தினார்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ, சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில்  பிரச்­சினை இல்லை. எனினும் இத­னூ­டாக சிறிய சிறிய பிரச்­சி­னை­களை தோற்­று­விப்­ப­தனை விட பேச்சு மூலம் தீர்க்க முற்­ப­டு­கிறோம். இதனை மீண்டும்  மீண்டும்  வலி­யு­றுத்த விரும்­ப­வில்லை என்றார். 

இதன் போது எழுந்த  இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா பேசு­கையில்,  ஜனா­தி­ப­தி­யுடன் நடந்த சர்­வ­மத பேச்­சு­வார்த்­தையின் பின்னர் கூட, ஊடகவியலாளர் மாநாடு நடத்தி அல்­லாஹ்­வையும்  முஸ்­லிம்­க­ளையும் இழி­வாக பேசி­யுள்ளார். தமது இறை­வனை தூற்­று­வ­தா­னது,  முஸ்­லிம்­களை வேத­னைக்­குட்­ப­டுத்தும் செய­லாகும்.

எனினும்  ஞான­சார தே­ரரை  ஏன் இது­வரை கைது செய்­ய­வில்லை. இதற்கு ஏன்  நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என கேள்வி எழுப்­பினார்.

இதன்  போது கடும் சின­முற்று பேச ஆரம்­பித்த நீதி  அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ, நல்­லாட்­சியில் இப்­படி பேசு­கி­றீர்கள். எனினும் அளுத்­கம சம்­ப­வத்தின் போது அன்­றுள்ள முஸ்லிம்  எம்.பி.க்கள்  ஒருவர் கூட எதிர்த்துப் பேச­வில்லை. நானும் கிரி­யெல்ல அமைச்­ச­ருமே சபையில் கடும் எதிர்ப்பு வெளி­யிட்டு பேசினோம். 

நீங்கள் அதன் போது வேறு எத­னையோ பேசி­னீர்கள். ஆனால், தற்­போது வாய்­கி­ழிய  கத்­து­கி­றீர்கள். நீங்கள் அங்கம் வகித்த முன்­னைய ஆட்­சியின் போதே இந்த நிலைமை ஏற்­பட்­டது.

பாது­காப்பு செய­லாளர், மஹிந்த ராஜபக்ஷ எம்மை பாது­காப்­பார்கள் என எண்­ணி­னீர்கள். அமைச்சு பத­வியும் வரப்­பி­ர­சா­தங்­களும் பெறு­வ­தற்­காக நீங்கள் எதனை வேண்­டு­மா­னாலும் செய்­வீர்கள். மக்கள் மீது அக்­கறை இல்­லா­த­வர்கள்  நீங்கள். 

இன­மு­றுகல் நிலை­மையை நினைத்­த­வுடன் தீர்க்க முடி­யாது. எமக்கு கால அவ­காசம் வேண்டும். எனக்கும் சமூக வலை தளங்­களில் முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றனர். மிகவும் கேவ­ல­மான செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். 

காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான சமூ­கத்தை நீங்­களே உரு­வாக்­கி­யுள்­ளீர்கள். அவர்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்­தவே நாம் முனை­கிறோம். வீண்­வாதம்  வேண்டாம். இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுக்க வேண்டாம். வரப்­பி­ர­சா­தங்­களை பெறவே நீங்கள் சரி. 

இதன்­போது இரு­வரும் சர­மா­ரி­யாக விவா­தித்துக் கொண்­டனர். 

தொடர்ந்தும் ஞான­சார தேரரின் அடாவடித்தனம் அதிகரிக்கிறது. இதற்கு  என்ன செய்யப் போகிறீர்கள் என இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வினவினார். 

இதற்கு உடன் நடவடிக்கை எடுக்க முடியாது.  காலம் தேவை. அமைச்சு பதவிகளுக்காக ஏன் இப்படி செயற்படுகிறீர்கள் என நீதி­ய­மைச்சர் குறிப்­பிட்­டார்.

9 comments:

  1. This so called justice minister is scared of this thera. It looks that way. Finally when this thera starts doing vert big damages then they will arrest him......We will not forget when gnanasara went against the court and the upright judge gave orders to arrest then he was remanded. Only this time and after he was bailed, this thera was silent and good. Now if we give him a chance, again he will do big damage.....when will our justice minister learn this....???

    ReplyDelete
  2. நாங்கள் முஸ்லிம்கள் விழிப்பாகத்தான் இருக்கிறோம்.எங்களுக்கு சத்தத்தின் அர்த்தமும் விளங்கும்

    ReplyDelete
  3. Your also racist Mr vijedasa, y u can't arrest him!!

    ReplyDelete
  4. The government should devide the Justice ministry & Buddha sasana ministry.

    ReplyDelete
  5. They can arrest the Mr.Razick because, he is in minority and maked hate speech.
    But they can't arrest Janasara.they are going to find the solutions via dialogue. Because, he is in majority and he did not make hate speech. He is protecting Buddhism.
    Is this justice? Is he a minister for Justice? How we can say, this is a good governance?

    ReplyDelete
  6. அநீதி அமைச்சரே, "கொஹித யன்னே மல்லே பொல்" பதில்கள் எமக்கு வேண்டாம். இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். ஒரு அப்துல் ராசிக்கை கைது செய்யப்பட முடியுமானால் ஏன் ஞான சாரா கைது செய்யப்பட முடியாது?? நீர் ஒரு மாபெரும் இனவாதி என்பதை இதன் மூலம் எங்களால் உணர முடிகிறது. கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு திரியும் அமைச்சர்களே, எம்பி மார்களே உங்களை போன்று சூடு சுரணை அற்றவர்களை, கோழைகளை, நாங்கள் பார்த்ததே இல்லை எதிர்காலத்தில் நாங்கள் பார்க்கவும் விரும்பவில்லை. மாற்றம் தேவை. மக்கள் சிந்திப்பார்களா??????????????

    ReplyDelete
  7. அநீதி அமைச்சரே, "கொஹித யன்னே மல்லே பொல்" பதில்கள் எமக்கு வேண்டாம். இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். ஒரு அப்துல் ராசிக்கை கைது செய்யப்பட முடியுமானால் ஏன் ஞான சாரா கைது செய்யப்பட முடியாது?? நீர் ஒரு மாபெரும் இனவாதி என்பதை இதன் மூலம் எங்களால் உணர முடிகிறது. கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு திரியும் அமைச்சர்களே, எம்பி மார்களே உங்களை போன்று சூடு சுரணை அற்றவர்களை, கோழைகளை, நாங்கள் பார்த்ததே இல்லை எதிர்காலத்தில் நாங்கள் பார்க்கவும் விரும்பவில்லை. மாற்றம் தேவை. மக்கள் சிந்திப்பார்களா??????????????

    ReplyDelete
  8. But They acted immediately in the case of SLTJ Razik without any delay. But they need time only for BBS. Nothing .. even if this BBS monk kill a muslim directly.. They will do nothing to him and hope will say we need time.

    Stay straight not double standard as per your position for the good will of people of this country.

    ReplyDelete
  9. ஒரெ வார்த்தை பௌத்த ததத்தை தூற்றினார் என்று ராசிக் எனும் ,

    ReplyDelete

Powered by Blogger.