Header Ads



ஞானசாரர் + டன் பிரசாத்திற்கு எதிராக பூஜித்தவிடம் முறைப்பாடு

ஞானசாரர் மற்றும் டன் பிரசாத் ஆகியோருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யவிருப்பதாக மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொலிஸாரிடம் அவசரமாக சென்று இனவாதிகளுக்கு எதிராக அவசரமாக முறைப்பாடு செய்வதைவிட, அவர்கள் எங்கு, எப்படி, எவ்வாறு இனவாதம் பேசினார்கள், குரோதத்தை வளர்த்தார்கள் என ஆய்வுசெய்து அவற்றை தெளிவான ஆதாரங்களாக பொலிஸாரிடம் சமர்ப்பித்து, சட்டநடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதே  புத்தி சாதூர்யமாகும்.

அந்தவகையில் நேற்று (01) ஞானசாரர் ஆற்றிய உரை மிகப் பாரதூரமானது. டன் பிரசாத் கொழும்பில் அல்ல அநுராதபுரத்திலும் பயங்கரமான உரையொன்றை ஆற்றியுள்ளார். இதுகுறித்த வரைப்பு தற்போது தயாரிக்கப்படுகிறது. வீடியோ ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளது. அவற்றை மிகவிரைவில் பொலிஸமா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிடம் கையளித்து, நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவுள்ளோம்.

முஸ்லிம் சமூகத்திற்காக பாடுபடும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இதற்காக தேவை எனவும் சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. Indeed a yeomen service by Shiraz Noordeen and the most effective way of presentation..

    ReplyDelete

Powered by Blogger.