Header Ads



ஜனாதிபதி முன், ஞானசாரா கூறிய கருத்துக்கள்..!

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற சர்­வ­மதத் தலை­வர்கள் மற்றும் மத விவ­கார அமைச்­சர்கள், கலந்­து­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான கலந்­து­ரை­யா­டலில் ஞானசாரா தெரிவித்தவை..!

நாங்கள் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளையோ, தமி­ழர்­களின் கோவில்­க­ளையோ தாக்­க­வில்லை. பௌத்த சம­யத்­துக்கு ஏனைய சம­யத்­த­வர்­களை மதம் மாற்­ற­வில்லை நாம் நல்­லி­ணக்­கத்­தையே விரும்­பு­கிறோம். பௌத்தம் நல்­லி­ணக்­கத்­தையும், கரு­ணை­யை­யுமே போதிக்­கி­றது என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர் நேற்று முன்­தினம் சர்­வ­மதத் தலை­வர்­களை விளித்துப் பேசு­கையில் குறிப்­பிட்டார்.

என்­றாலும் முஸ்­லிம்கள் தங்­க­ளது புனித தலங்­க­ளாகக் கொண்­டுள்ள இடங்கள் தொடர்பில் சில சிக்­கல்கள், பிரச்­சி­னைகள் இருப்­ப­தா­கவும் அவர் கூறினார். 

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

பௌத்த மர­பு­ரி­மைகள் ஏனைய மதத்­த­வர்­களால் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது பாரம்­ப­ரிய பௌத்த வர­லாற்­றுக்கு சான்­றா­க­வுள்ள தொல்­பொருள் பிர­தே­சங்கள் முஸ்­லிம்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. கூர­கல, தெவ­ன­கல, முகுது மகா­வி­காரை, புனித பூமி காணிகள் முஸ்­லிம்கள் வச­முள்­ளன.

இவை தொல்­பொருள் ஆய்வு பிர­தே­சங்­க­ளாகும். இந்த ஆக்­கி­ர­மிப்­பு­க­ளுக்கு எதி­ராக தொல்­பொருள் சட்டம் அமு­லாக்­கப்­ப­ட­வேண்டும் எனக் கோரு­கிறோம்.

முகுது மகா­வி­கா­ரைக்குச் சொந்­த­மான காணி 276 ஏக்­கர்­க­ளாகும். இந்த 276 ஏக்­கர்­களில் 3 ஏக்­கர்­களைத் தவிர எஞ்­சிய காணி முஸ்­லிம்­களால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

அக்­கா­ணியில் முஸ்­லிம்கள் வீடு­களை நிர்­மா­ணித்­துள்­ளார்கள். முகுது விகாரை பன்­ச­லைக்கு செல்­வ­தற்­கான பாதையும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. மூடப்­பட்­டுள்­ளது. தற்­போது பன்­ச­லைக்கு செல்­வ­தற்கு கட­லோரப் பாதையே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. முகுது விகாரை பன்­ச­லைக்­கான பெயர் பல­கையும் அப்­ப­குதி மாற்று இனத்­த­லை­வர்­களால் சிதைக்­கப்­ப­டு­கி­றது. தொல்­பொருள் பிர­தே­சங்கள் இவ்­வாறு கையா­ளப்­ப­டு­வது தொல்­பொருள் சட்­டத்­தினால் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். என்றார்.

7 comments:

  1. We are shame on you Mr. My3...we brought you to the power but you are worst than Mahinda....
    Your government arrested Mr. Abdul Razik for a word he used against these TERRORIST (BBS, RAVAYA, Sinhale......etc)
    But you sit together with the Terrorist groups who are against the all community, who are against to the Piece, Who are against to the Law, Who are dumped the court orders..many times...
    So, where is the Law..of your country...?
    Where is the Law of Yahapalanaya...?
    Shame on you...Shame on you....Shame on you...
    If you do continue this, Sure God will punish you & your colleagues soon...Just wait the pure justification..from the God...

    ReplyDelete
  2. ஞானசார கூறுகின்ற அனைத்துமே பொய். 1980 களுக்கு முன்னர் முகுதுமகா விகாரை என்ற ஒன்று இலங்கையில் இருக்கவில்லை. 80 களிலேயே நிலத்தின் கீழ் புதைந்திருந்த அது தோண்டி எடுக்கப்பட்டது. தோண்டி எடுக்கப்பட்டதிலிருந்து முஸ்லிம் ஒருவரே அதன் பாதுகாவலாளராக இருந்தார். பௌத்தரிகளின் கவனம் இப்பொழுதுதான் அதன் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவரை குறித்த விகாரையை பாதுகாத்து பௌத்தர்களிடம் கையளித்தது அப்பிரதேச முஸ்லிம்கள்தான்.

    விகாரைக்கென்று விகாரையின் பெயரில் காபட் இடப்பட்ட இரட்டைவழிப்பாதை இருக்கிறது. மேலும் விகாரைக்கென்று பெரும் நிலப்பரப்பு பொத்துவில் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    விகாரைக்கென்று 276 ஏக்கர் நிலம் இருந்ததாக எங்கும் குறிப்பில்லை. மேலும் இவ்விகாரை பற்றி இலங்கையின் எந்த வரலாற்று நூல்களிலும் கூறப்படவில்லை. துட்டகெமுனு மன்னன் இப்பிரதேசம் ஊடாக பயணம் செய்ததாக ஒரு குறிப்பு மட்டும் வரலாற்றில் உள்ளது.

    ReplyDelete
  3. Achiology evidence available only for Buddhism in Sri Lanka? ??

    ReplyDelete
  4. Mr.China Ibrahim, for Allah's sake please do not use ' we brought you to power'. This is a very serious statement. We could be an influential reason but repeatedly mentioning this in social forums can back fire.

    ReplyDelete
  5. Ethnic harmony & Peace are plus (+) But BBS & RB are Minus (-). My3's dreams will spoil.

    ReplyDelete
  6. GNANASARA is preaching HATRED in public and lying in
    discussions in front of Sinhala leaders. There are
    video clips that show him telling his followers in
    coded language to scold the ministers in filth over
    the phone . Muslims must use maximum pressure using
    all avenues to get My3 and Ranil to act firmly and
    eliminate this menace for good .No time waste on
    this DANGEROUS drama !

    ReplyDelete

Powered by Blogger.