Header Ads



வசீம் தாஜூதீனின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆர்ப்பாட்டம்


ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இ​ணைந்து, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வசீம் தாஜூதீன் கொலையில் சந்தேகநபரான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு முன் பிணை வழங்கப்படக்கூடாது என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர தமக்கு முன் பிணை வழங்கக்கோரி இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வருகைத்தந்துள்ளார்.

இதன்போதே ஆனந்த சமரசேகரவிற்கு முன் பிணை வழங்கப்படக்கூடாது என்றும், அவர் கைது செய்யப்பட வேண்டும், வசீம் தாஜூதீனின் கொலைக்கு உரிய நீதி வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.