Header Ads



வெறுப்­­­­புப் பேச்­சும், நமது கடப்­பா­டும்


நாட்டில் அண்­மைக் கால­மாக இன­வாத, மத­வாத ரீதி­யி­லான வெறுப்­புப் பேச்­சுக்கள் அதி­க­­­ரித்து வரு­கின்­றமை தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரும் கவ­லை­களை வெளியிட்­டு வரு­கின்­றனர்.

குறிப்­பாக கடந்­த ஒரு மாத காலத்­தினுள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் அடுத்­த­டுத்து இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­ப­வங்­க­ளை இவற்­றுக்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பி­ட­லாம்.

மட்டக்­க­ளப்பில் சுமணரத்ன தேரர் கிராம சேவை­­யா­­ள­ருக்கு எதிராக முன்­வைத்த கருத்­துக்கள், கொழும்பில் முஸ்லிம் தனியார் சட்­டம் தொடர்பிலான ஆர்ப்­பாட்­டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் செய­லாளர் அப்துர் ராஸிக் வெளியி­ட்ட கருத்­துக்கள், புறக்­கோட்டை ரயில் நிலையம் முன்­­பாக டான் பிரசாத் என்­பவர் வெளியிட்ட கருத்­துக்கள் மற்றும் பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் தொட­ராக வெளியிட்டு வரும் கருத்­து­க்கள் என்­ப­வற்றை இவற்­றுக்கு பிரதான உதா­ர­ணங்­க­ளாகக் குறிப்­பி­ட­லாம்.

இதற்­கப்பால் தினமும் ஆயிரக் கணக்­கா­னோர் சமூ­க வலைத்­த­ளங்­களில் பதி­வி­டும் வெறுப்­­பூட்டும் கருத்­துக்கள் பற்­றி­யும் நாம் கவனம் செலுத்த வேண்­டி­­யு­ள்­ளது. மேற்­கு­றித்த நபர்கள் தெரி­விக்கும் கருத்­துக்கள் சமூக வலைத்­த­­ளங்­களில் பதி­வேற்­றப்­படும் போது அவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இரு தரப்­­பி­னரும் முட்டி மோதிக் கொள்­கின்­றனர்.

இதன் கார­ண­மாக மேலும் பல புதிய புதிய வெறுப்­­­பூட்டும் கருத்­துக்கள் முளை­வி­டு­கின்­ற­ன. இவை சமூக வலைத்­த­ளங்களை ஆக்­கி­ர­­மித்­துள்­ள­துடன் மிக வேக­மாக வெவ்­வேறு வடி­வங்­களில் பகி­ரப்­ப­டு­கின்­றன. இத­ன் மூலம் சமூ­கங்கள் மத்­தியில் வீண் சந்­தே­கங்­களும் கருத்து முரண்­பா­டு­களும் தோற்றம் பெறு­கின்­ற­ன.

இந் நிலை­யில்தான் இவற்றைக் கட்­டுப்­படுத்த வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­­யு­றுத்­தி­யுள்ள முன்னாள் ஜனா­தி­பதி சந்தி­ரிக்கா குமா­ர­துங்­க, இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ரா­க தாம­தி­யாது சட்­டத்தை அமுல்­ப­டுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

'' தமது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்குடன் குரோத வெளிப்பாடுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் எங்களது சகோதர இலங்கைப் பிரசைகளை அவமானப்படுத்தி இழிவிற்கு உட்படுத்தி இன அல்லது மத அடிப்படையில் இலங்கை சமூகத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான எவ்வித சந்தர்ப்பத்தையும் வழங்க முடியாது.

இனங்களுக் கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் சம்பந்தமாக தாமதியாது சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டியுள்ளது '' என்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா வெளியிட்­டுள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­து.

இவ்­வாறு இனங்­க­ளுக்­கி­­டை­யி­லான வெறுப்­புப் பேச்சு நிகழ்­வுகள் ஒரு­புறம் இருக்க முஸ்­­லிம்கள் தமக்கு மத்­தியில் நிலவும் அர­சியல் மற்றும் மார்க்க கொள்கை வேறு­பா­டுகள் கார­ண­மாக ஒரு­வரை ஒருவர் விமர்­சித்து சமூக வலைத்­த­­­ளங்­க­ளிலும் மேடை­க­ளிலும் வெளியிடும் கருத்­துக்­களும் இன்று பெரும் பிரச்­சி­னை­யா­கவும் வெறுப்பைக் கக்­கு­­வ­­தாக அமைந்­துள்­ள­மையும் கவ­லைக்­கு­ரி­ய­தா­கும்.

சமீப கால­மாக அர­சி­யல்­வா­தி­களின் ஆதர­வா­ளர்­களும் மார்க்கப் பிர­சார அமைப்­­­பு­களின் ஆத­ர­வா­­ளர்­களும் ஒரு­வ­ரை­யொ­ருவர் கடு­மை­யாக சொற்­க­­ளால் தாக்கி வரு­­கின்­றனர். இது­வும் ஒரு வகை­யில் வெறுப்­புப் பேச்­சு­­தான் என்­பதை நம்­ம­வர்கள் மறந்து­ வி­டு­கின்றனர்.

என­வேதான் பிற சம­யத்­த­வர்கள் எம்மை நோக்கி வெறுப்­பா­க பேசுகின்ற போது நாம் எவ்­வாறு ஆத்­தி­ரப்­ப­டு­கி­றோமோ அதே­போ­ன்­றுதான் நாம் மற்­றொ­ரு­வரை நோக்கி வெறுப்­பாக பேசும்­போதும் அவர்கள் ஆத்­தி­ரப்­ப­டு­கி­றார்கள், சங்­க­டப்­ப­டு­கி­றார்கள் என்­பதை மறந்­து­விடக் கூடா­து.

எனவே வெறுப்பைத் தவிர்த்து அன்பை வெளிப்­ப­டுத்­து­வதே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரே தீர்­வாக அமையும் என்­பதை இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றோம்.

விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் இது

No comments

Powered by Blogger.