Header Ads



மிக விரைவில் வீழ்ச்சி காணவுள்ள இலங்கை - பசில்

மிகவிரைவில் வீழ்ச்சிக்காணவுள்ள இலங்கையை காப்பாற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு செவனகல பகுதியில் இடம்பெற்றபோது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

இந்த நாட்டை மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்வது மாத்திரமல்லாமல், நாட்டை இருளில் இருந்து காப்பாற்ற அவரால் மாத்திரமே முடியும் என்றும் பசில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கசுமாலி கசுமாலி அப்போ ஓ அண்ணனை தவிர வேறுயாராலும் நாட்டை காப்பாற்ற முடியாதா? உன் அண்ணன் நாளை மண்டயை போட்டால் இலங்கை அலிந்துவிடுமா சுமார் பத்துவடரும் நீ உன்குடும்பம் ஆட்சி செய்து மக்களின் சொத்துக்களை சூறையாடி அவர்களை கடன்காரர்களாக்கி நாட்டின் பொருளாதாரத்தை 50 வருடத்திற்கு பின்னோக்கி விட்டுவிட்டீர்கள்டா! மீண்டும் உங்களை மக்கள் ஆட்சிக்கு கொண்டுவந்தால் அவர்களை அந்த தீங்கிற்காக பெரும் சுனாமி அலை அளித்துவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.