Header Ads



தமிழ் இனவாதிகள் என்னை அடித்து, எரித்து சாதனை படைத்தார்கள் - றிசாட்

இனவாதத்தை நிறுத்தி நிம்மதியாக வாழவிடுங்கள். கடந்த அரசாங்கத்திற்கு நடந்தது இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரு படிப்பினை என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சர்ஜான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாம் அரசியல்வாதிகளாக விரும்பி வந்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகளாக வருவோம் என்று நினைத்தவர்களும் அல்ல. அரசியலைப்பற்றி சிந்திக்க முடியாத காலத்தில் எங்களுடைய மக்களின் கண்ணீரும் கம்பளையுமே எங்களை அரசியலுக்குள் தள்ளியது. ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் அது தொடர்பாக கட்சிகள் தீர்மானம் எடுத்த போது நாங்கள் நிம்மதியாக இருக்கவில்லை. இந்த நல்லாட்சியை உருவாக்குவதற்காக ஆதரிப்பதா அல்லது எங்களுக்காக பல அபிவிருத்திகளை செய்த அந்த அரசாங்கத்தை ஆதரிப்பதா என்ற கேள்வி எங்கள் முன்னால் வந்தது.

பெருந்தலைவர் அஸ்ரப்பின் காலத்தில் கூட ஒற்றுமைப்படாத இந்த சமூகம் அல்லது இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் ஒற்றுமைப்படாத சமூகம் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர் யார் என்று பார்க்காமல் வெற்றிலைச்சின்னத்திற்கு எதிராக என்ன சின்னம் என்று கூட பார்க்காமல் ஒற்றுமைப்பட்டுக்கொண்டது. அது எதற்காக நிம்மதியாக வாழ வேண்டும், மதக்கடமைகளில் யாரும் கைவைக்க அனுமதிக்க கூடாது, எங்களுடைய வாழ்வுரிமையில் கடந்த ஆட்சியாளர்களது காலத்தில் நடந்த அநியாயம் நடக்ககூடாது.

தம்புள்ளையில் இருந்து கிராண்பாஸ் வரையான பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமை, அளுத்கமையில் அப்பாவி இளைஞர்கள் இரண்டு மூன்று பேர் கொல்லப்பட்டமை என்ற சம்பவங்கள் இடம்பெறும் போது கேட்பார் யாரும் இன்றி இருந்தபோது கையை ஏந்தியவர்களாக ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். அப்போது யார் போனாலும் இவர்கள் போகமாட்டார்கள் என்று செல்லப்பட்ட காலத்தில் எங்களுடைய கட்சியும் முடிவெடுத்து நாமும் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக சென்றோம். அப்போது நாங்கள் பணம் கேட்கவில்லை, வேறு எதைம் கேட்கவில்லை.

கேட்டதெல்லாம் இந்த நாடு சுதந்திரமடைவதற்கு தமிழ், சிங்கள, முஸ்லீம் தலைமைகள் ஒற்றுமைப்பட்டோம். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் தனி நாடு கேட்டு போராடினார்கள். தெற்கில் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் தரித்து ஆட்சியை பறிப்பதற்கு போராடினார்கள். ஆனால் எங்கள் சமூகம் ஆயுதத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஜனநாயகத்தை நம்பிய சமூகம். அதனால் பல உயிர்களை பலி கொடுத்தோம். பல சொத்துக்களை பறிகொடுத்தோம். பல வருடங்கள் அகதிகளாக கையேந்தி வாழும் துன்பியல் நிலைய அனுபவித்தோம். அப்படிப்பட்ட இந்த சமூகம் சிங்களவர்களோடும் தமிழர்களோடும் சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றது. சகோதரர்களாக வாழ ஆசைப்படுகின்றோம். அந்த நிலையை உருவாக்குங்கள் என கேட்டோம். ஒரு நாசகார கூட்டம் சிங்களவர்களையும் முஸ்லீம்களையும் மோதவிட்டு பல உயிர்கள் பலியான பின்னர் இந்த சமாதானத்தை அனுபவிக்கும் ஓரிரு வருடத்திற்குள் மீண்டும் இன ரீதியான கலவரத்தை உருவாக்கி இரத்த ஆறு ஒடுவதற்கு விளைகின்றது.

கடந்த அரசு இதனை கட்டுப்படுத்தவில்லை. சட்டத்தை நிலைநாட்டவில்லை. இந் நிலையில் எங்களுடைய உரிமையை அனுபவிக்க எங்களது தொழிலை செய்ய, மதத்தை வழிபட, கல்வியை கற்பதற்கும் சமூகம் சார்ந்த சில விடயங்களையும் பற்றி பேசிவிட்டே நாம் அரசுக்கு ஆதரவளிக்க சென்றோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட நல்லாட்சியிலும் அதே நிலை ஒரு சில ஆசாமிகளினால் அல்லது ஒரு சில நாசகார சக்திகள் படம் எடுத்து ஆடத்தொடங்கியிருக்கின்றார்கள். இந்த ஆட்டத்தை ஜனாதிபதியும் பிரதமரும் இல்லாமல் ஆக்கி இந்த நாட்டில் இருக்கின்ற சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நல்லதொரு படிப்பினை இந்த நாட்டில் உள்ளது. 10 வீதம் என்ற எமது சமூகத்தை எண்ணிப்பார்த்தார்கள். எங்கள் வாக்கு முக்கியமில்லை என்று பார்த்தார்கள். அன்றைய அரசுக்கு கிடைத்த பரிசும் என்னவென்று தெரியும். எனவே இந்த நல்லாட்சியில் நாங்கள் நாடு கேட்கவில்லை. அரசியல் அமைப்பை மாற்றுங்கள் என்று போராடவில்லை.

தேர்தல் முறையை மாற்றுங்கள் என்று போராடவில்லை. நிறைவேற்று ஜனாதிபதியை இல்லாது ஒழித்து நிறைவேற்று பிரதமர் முறையை கொண்டு வாருங்கள் என்று நாங்கள் கேட்டவில்லை. எங்களுக்கு அது அல்ல பிரச்சனை. எங்களுக்கு தேவை நிம்மதியே. இந்த அமைச்சுப்பதவிகள் என்பது தற்காலிகமானது. இந்த அதிகாரங்கள் என்பது தற்காலிகமானது. இந்த பதவிகளுக்காக சமூகத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டோம். விலைபோகவும் மாட்டோம். கொட்டில் வீடுகளை கல்வீடுகளாக கொடுத்த எனக்கு கிடைத்த தண்டனை எனது கொடும்பாவியை செய்து செட்டிகுளத்திற்கு முன்னால் அந்த இனவாத அரசியல்வாதிகள் செருப்பால் அடித்து எனது உடம்பை எரித்து சாதனை படைத்தார்கள். சாலம்பைக்குளம் என்பது 25 வருடம் அனுராதபுரத்தில் அகதி முகாமில் வாழ்ந்த சமூகம். இதுதான் எனக்கு தந்த தண்டனை.

எங்களுடைய பிரச்சினை பேசப்படவேண்டும். உள்ளத்தால் பேசப்படவேண்டும். உண்மையாகவும் சமுதாய உணர்வோடும் பேசப்பட வேண்டும். கைத்தொழில் அமைச்சராக இருந்துகொண்டு நான் சிலாவத்துறையில் கைத்தொழில்பேட்டை வேண்டும் என்று கேட்டேன். கடிதம் அனுப்பினேன். மன்னாரில் ஒன்றை அமைத்தேன். முல்லைத்தீவில் ஒன்றை அமைக்கப்போகின்றேன். மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் அமைக்கின்றேன். அந்தவகையில் வடக்கில் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரேயொரு பிரதேச செயலகம் முசலி பிரதேச செயலகம். அந்த இடத்தில் 4 வருடங்களுக்கு முன்னர் கைத்தொழில் பேட்டைக்காக 25 ஏக்கர் காணியை ஒதுக்கி வைத்தேன். அதை கேட்ட போது சிலாவத்துறை சுற்றுலாத்துறையை மேம்படுத்தக்கூடிய பிரதேசம்.

எனவே அங்கு கைத்தொழில் பேட்டையை அமைக்க முடியாது அதனை வேறு பிரதேசத்திற்கு மாற்றுங்கள் என ஒரு கல்விமான் முன்னாள் பிரதம நீதியரசர் தற்போதைய முதலமைச்சர் 3 மாத்திற்கு பின்னர் கடிதம் அனுப்புகின்றார். அவ்வாறெனில் எப்படி சேர்ந்து வாழ முடியும். எப்படி அவர்கள் எங்களை அணைக்கமுடியும். நாங்கள் தமிழ் சமூகத்துக்கு விரோதிகள் அல்ல. தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரத்திற்கு நீதிவேண்டும். உள்ளத்தால் பேசுங்கள். பிச்சைக்காரனின் புண்ணைப்போல காட்டி பிச்சை எடுக்கும் பயணத்தை நிறுத்துங்கள். உண்மையை பேசுங்கள். நாங்கள் தயாராக இருக்கின்றோம். எமது கட்சியை பல மாவட்டங்களிலும் உள்ள மக்கள் ஏற்று பாராளுமன்ற உறுப்பினர்களை தந்துள்ள நிலையில் ஏதோ ஒரு கட்சியுடன் பேசி இந்த நாட்டில் இனப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று நினைக்கின்றார்கள். எங்களுடன் இந்த வடக்கு கிழக்கை பற்றியோ மீள்குடியேற்றம் பற்றியோ வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சனைகள் பற்றியோ ஒரு நிமிடம் கூட பேசவில்லை.

காணி அதிகாரம், கல்வி அதிகாரம், சுகாதார அதிகாரம், நீர்ப்பாசன அதிகரம் எல்லாம் வந்து விட்டது என சொல்கின்றவாகள் ஒருநாளாவது எம்மை அழைத்து பேசினார்களா. பேசவில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை ஒரு மேசையில் இருந்து பேசுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு நாங்கள் விரும்புகின்றோம். மாகாண சபையோடு பேசுவதற்கு நாங்கள் விருப்புகின்றோம். கிழக்கில் சிறந்த மாகாண சபை இருக்கின்றது. எல்லோருமாக இருந்து பேசவேண்டும். அதுதான் நிரந்தர தீர்வை தரும். இந்த அசுடன் இருக்கும் நட்பு காரணமாக வேறு சமூகத்தை விட்டுவிட்டு பேசி எந்த தீர்வையும் பெற்றுவிட முடியாது என தெரிவித்தார்.

15 comments:

  1. இன்று முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை திருப்பிவிட்டு சிங்கள முஸ்லீம் மோதல் பக்கம் தென்னிலங்கையை திசை திருப்பி வடகிழக்கை தமிழ் தீவிரவாதம் விழுங்க பார்க்கின்றது. ஆனால் முட்டாள் சிங்களவனோ இந்த நாட்டை சின்னாபின்னமாகிய தமிழ் தீவிரவாதத்தின் உண்மை முகத்தையும், டயஸ்போறாக்களின் காய் நகர்த்தல்களை அறியாமலும் தன் தலையில் மண்ணை வாரிபோட்டுகொள்ளகின்றனர். இதன் எதிர்வினையை கூடிய சீக்கிரம் சிங்களவர்கள் தமிழ் தீவிரவாதிகளிடம் இருந்து பெற்றுக்கொள்வார்கள். யதார்த்தத்தில் இன்றும் சிங்கள ஊர்களில் வாழும் முஸ்லிம்களை சிங்களவர்கள் நம்பினாலும் தமிழ் தீவிரவாதிகளை நம்ப மாட்டார்கள். ஆனால் இந்த நிலையை மாற்றவே தமிழ் தீவிரவாதம் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. அறிவுக் கொழுந்து... தமிழனும் சிங்களவனும் சண்டை பிடிக்கிறதால தான் கொஞ்சம் தப்பியிருக்கீங்க.. விரைவில் தெரியும் .

      Delete
    2. ஆமா வெகுவிரைவில் உங்களுக்கு சமஷ்டியை கொடுத்து உங்களை அரவணைத்துகொள்வான் சிங்களவன். :p

      Delete
  2. #IR MS....haha nice try but older technique Sinhalese and tamils know who u r

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாருனு சிங்களவனுக்கு தெரியும் எங்களுக்கும் தெரியும் 30 வருடம் ஆயுதம் தூக்கிய தீவிரவாதிகள் நீங்க இது கூட பண்ணாம இருப்பீங்களா?

      Delete
  3. @IR MS, எதிரியை நம்பலாம், ஆனால் காட்டிக்கொடுபவனை நம்பக்கூடாது.

    ஏனெனில் காட்டிக்கொடுப்பவன் அதிக ஆதாயம் உள்ள பக்கத்திற்கு தாவி விடுவான் கண்டியலோ.



    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அன்டனி காட்டிப்கொடுப்பது எப்படி என்று உங்கள் தலைவனின் அல்லகை கருணாவிடம் கேட்டாள் நன்றாக சொல்லிக்கொடுப்பார்.

      Delete
    2. நீங்க ஒன்றுக்கும் உதவாத ஒரு தனி நாட்டு கோட்பாட்டை வைத்து ஆயுதம் தூக்கி பொது இடத்தில் குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்வீர்கள் அதற்கு நாங்க ள் ஆதரவு கொடுக்கவில்லையென்றால் காட்டி கொடுத்தவர்களா? ஏன் உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா? ஒருவேளை நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆயுதம் ஏந்தியிருந்தால் இன்று ஒரு வேலை சோத்துக்கு கூட நாதியில்லாத சமுதாயமாக தான் இருந்திருப்போம். வரலாற்றில் நீங்கள் செய்த கொலைகளையெல்லாம் இன்னொரு சமுதாயத்திற்கு கரி பூசுவதால் மறைத்துவிடலாம் என்றெண்ண வேணாம். பிரபாகரன் என்பவனே ஒரு வரலாற்று பிழையென்று கருணா முதல் தமிழினி வரை சொல்லியாச்சு

      Delete
  4. நல்லதோர் பேச்சு, பௌத்த தீவிரவாதிகள் சொந்த கணக்கை அதிகரிக்க நாட்டின் கணக்கை சரிக்கிண்றனர், யாருடைய கோரிக்கைகளும் அவரவர் விருப்பத்தின்படியே தேர்வுசெய்யும் வளியில் முனெடுக்க படுகிண்றது. இஸ்லாமியர் நாம் இந்நாட்டில் தேடுவதெல்லாம் தொல்லையற்ற வாழ்வையே, அது பொருளாதாரமோ, திருமணமோ, ஆட்சியோ எம்பாட்டில் செல்வதே எமதுபாணி. மற்றவரைபற்றி எந்தத்தேவயும் எமக்கில்லை, மற்ரவர் விடயத்தில் மூக்கை நாம் நுளைப்பதுமில்லை;

    எம்மை தொல்லை தராதவரை.

    ReplyDelete
  5. சகோதரர் றிசாத் அவர்களே, உங்களுடன் பேச வேண்டுமா அல்லது முஸ்லிம்களுடன் பேசவேண்டுமா? என்பதில் நீங்கள் தெளிவடையவேண்டி உள்ளது. இதிலும் நீங்கள் அரசியல் செய்யவே விரும்புகிறீர்கள். முதலில் இந்த நாட்டுக்கு அரசியல் தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ( உங்களது கட்சி; one man show) தீர்மானியுங்கள். நீங்கள் ஆதங்கத்தில் பேசுகிறீர்கள், நாங்கள் எதிர் பார்ப்பது அறிவுடன் பேசுவதை. உங்களது சுயநலம், சுய சிந்தனையை மழுங்கடித்து விட்டது போல் தெரிகிறது. முஸ்லிம்கள் ஆகிய நீங்கள் ஏன் ஒரு தலைமையில் இயங்க முடியாது? ஏன் நீங்கள் அதட்கான முயட்சியை எடுக்கவில்லை. நீங்கள் ( முஸ்லிம்கள்) ஒற்றுமையாய் இருந்தால் இப்படியெல்லாம் என்னுடனும் பேசுங்கள் என்று தமிழ் தரப்பை கேட்கவேண்டிய தேவை இருக்காது.

    ReplyDelete
  6. @IR MS: முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை நாம் திருப்பி விட்டோமா?. 30 வருடங்களாக நீங்கள் அதை செய்து குளிர் காய்ந்தீர்கள் . இவ்வாறான இழி வேலைகளை செய்ய வேண்டிய எந்த அவசியமும் தமிழர்களுக்கு கிடையாது . 30 வருடங்களாக உங்களது உதவி சிங்களவர்களுக்கு தேவைப்பட்டது ஆனால் இனி தேவைப்படாது . அதன் காரணமாகவே அவர்கள் கோபம் உங்கள் மேல் திரும்பி உள்ளது . இதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது . மீண்டும் தமிழ் சிங்கள மோதல்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று அல்லாஹ்வை வேண்டுவதை தவிர உங்களுக்கு வேறு வழியே கிடையாது .

    ReplyDelete
    Replies
    1. தனிநாடுகோரி 30 வருடம் நீங்களும் செத்து சிங்களவனயும் கொண்று போதாதெண்று இஸ்லாமியரின் நிம்மதி,வாழ்விலும் மண்ணைப்போட்டது உலகறிந்தவிடயம் நீருட்பட. இப்போ கிறுக்குத்தனமாக நாங்கள் அதில் குளிர்காய்ந்தோம் என்கிறீர்.

      எதுநடப்பினும் அல்லாஹ்வின் செயெலாக நம்பும் நாம் கண்டிப்பாக இறைவனை வேண்டிக்கொண்டேயிருப்போம்.
      அனீதியிளைக்கப்பட்டவருடய வேண்டுதலுக்கு என்ன சன்மானமென அல்லாஹ் நந்திக்கடல் முடிவில் உங்களுக்கு உணர்த்தினான், நாமும் பார்த்தோம்; இனிமேலும்
      பார்ப்போம்...

      இன்ஷாஅல்லாஹ்...

      Delete
  7. தமிழ்ப் பேரினவாதிகள், சிங்கள, முஸ்லீம் இனக்கலவரத்திற்கு முஸ்தீபு வேலைகளை செய்கிறார்கள்.

    பவுத்த பேரினவாதம், இதை ஆதரிக்கிறது.

    ஒரு கல்லில் இரு மாங்காய் விழவேண்டும் என சிங்கள பேரினவாதிகள் நினைக்கிறார்கள்.

    ReplyDelete
  8. நீங்க ஆயுதம் தூக்கி தீவிரவாதம் செய்வீங்க அப்பாவி சிங்கள முஸ்லிம்களை குண்டு வைத்து கொல்லுவீங்க சிங்களவன் விரக்தியில் பதிலடி கொடுத்தால் அதை நாங்க காட்டிக்கொடுத்ததா சிம்பிளா சொல்லிடுறீங்க. கருணா முதல் குப்பன் சுப்பன் வரை காட்டியும் கூட்டியும் கொடுத்தவனையெல்லாம் உன் சமுதாயத்திற்குள்ளே வைத்துக்கொண்டு இன்னொரு சமுதாயத்தின் மேல் பழி போட உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையாடா? நீங்க தேய்ந்துபோன சமஸ்டி, ஈழம், வடகிழக்கு இணைப்பு என்பதையெல்லாம் தூக்கிப்பிடித்துக்கொண்டு குழப்பம் உண்டாக்கிகொண்டிருக்கும்வரை சிங்களவன் உங்களை தீவிரவாதிகளாக தான் பார்ப்பான்.நாம் சிங்களவரோடு ஒற்றுமையாக இருப்பதால் காழ்ப்புணர்வில் அதுவும் முஸ்லிம்கள் சதியென்று சொல்லித்திரிந்தால் வன்னிக்காட்டு முட்டாள்களை தவிர உலகில் வேறு முட்டாள் இனம் இல்லவே இல்லையென்று நாமும் எண்ணிக்கொள்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.