Header Ads



''நாடா புயல்'' யாழ் முஸ்லிம் வட்டாரமும் பாதிப்பு (படங்கள்)


-பாறுக் ஷிஹான்-

நடா புயல் காரணமாக  யாழ்ப்பாணத்தின்  பல பகுதிகள்  பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. இப்  புயலின் காரணமாக ஏற்பட்ட   கடுமையான மழை தற்போது வரை பெய்த வண்ணம் உள்ளது.

இம்மழைவிழ்ச்சியின் காரணமாக  கடுமையான குளிர் காலநிலை நிலவுவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன்  யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் பொம்மைவெளி சூரியவெளி பறைச்சேறிவயல் என எல்லா இடங்களிலும் வெள்ளப்பாதிப்பு இம்மழை வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, நாடா புயலின் தாக்கம் காரணமாக யாழ். மாவட்டத்தில் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்புயலினால் யாழ் மாவட்டத்தில் உள்ள  வாழை பழ செய்கையாளர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.