Header Ads



உள்ளுராட்சி தேர்தல், மே மாதம் நடைபெறும் - ஜனாதிபதி

தொகுதிவாரி அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தேர்தலில் கட்சியை வெற்றியடைச் செய்யும் பொறுப்பினை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.