Header Ads



8 நாட்களாக கட்டுநாயக்கா விமானநிலையத்தில், காத்திருக்கும் பௌத்த பிக்கு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கடந்த எட்டு நாட்களாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சீனாவை சேர்ந்த பிக்கு ஒருவர் தங்கியிருப்பதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

களனி பிரதேச பௌத்த விகாரைக்கு தொடர்புபட்டுள்ள மாநாயக்க பௌத்த பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்காக, குறித்த பிக்கு இலங்கை வந்துள்ளார்.

களனியில் அமைந்துள்ள பௌத்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ள போதிலும், அவர்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கே குறித்த பிக்குவை அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து பௌத்த பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, குறித்த பிக்குமார் தங்கியிருப்பதற்கு தேவையான கட்டிட நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடையவில்லை. இதனால் சீன நாட்டு பிக்குவை தங்க வைப்பதற்கான வசதிகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுடன் பிக்குவை அனுப்பி வைக்க முயற்சித்த போதும், அவர் செல்ல மறுத்துள்ளார்.

குறித்த பிக்கு சீன மொழியில் மாத்திரம் பேசுவதால், அவரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவது கடினமாக உள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. I saw this monk last Saturday at the departure area. He was seated in the area where the airport taxi offices are situated.

    ReplyDelete
  2. There are many Chinese engineers, technicians and workers in SL. Also, the Chinese embassy is still in operation. Why cannot Authorities get help??

    ReplyDelete

Powered by Blogger.