Header Ads



நடப்­ப­வைகள் நல்­ல­­தற்­கல்­ல


இலங்­கையில் வாழு­கின்ற முஸ்­லிம்­கள் மீண்டும் இருள் சூழ்ந்­த­தொ­ரு காலப்­ப­கு­திக்குள் தள்­ளப்­ப­டு­கின்­ற­னரா என்ற கேள்­வியே சமூகம் தொடர்பில் அதிகம் கவ­லைப்­ப­டு­ப­வர்கள் மத்­தி­யில் இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது.

கடந்த சில நாட்­க­ளாக நாட்டில் நடை­பெற்று வரும் சம்­ப­வங்­களே இவ்­வா­றா­ன­தொரு துர­தி­ஷ்­ட­­வ­ச­மான கேள்வி எழக் கார­ண­மா­கும்.

2012 ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யி­­லி­ருந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல்­வேறு வெறுப்­பூட்டும் பிர­சா­ரங்­களும் தாக்­கு­தல்­களும் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இடம்­பெற்­றன.

இதனை அப்­போ­தைய அர­சாங்கம் கண்டு கொள்­ளாத அதே நேரம் இன­வா­தி­க­ளுக்கு உறு­­து­ணை­யா­கவும் இருந்­தது. இதன் கார­ண­மா­கவே 2015 ஜன­வரியில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தலை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்ட முஸ்­லிம்கள் ஆட்சி மாற்­றத்­திற்கு வித்­திட்­ட­னர்.

அன்­றி­லி­­ருந்து பல மாதங்­க­ளாக முஸ்­லிம்கள் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ச­மா­­கவும் தமது வாழ்வைத் தொடர்ந்­தனர். தாம் கஷ்­டப்­பட்டு கொண்டு வந்த ஆட்சி மாற்றம் தமக்கு நன்­மை­ய­ளிப்­ப­தாக கரு­தினர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த நல்ல எண்­ணத்தில் மண் விழத் தொடங்­கி­ய­து.

மீண்டும் இன­வாதம் தலை­வி­­ரித்­தாடத் தொடங்­கி­யுள்­ளது. கடந்த காலத்தில் வீரி­ய­மாக இன­வாதம் பேசி­ய­வர்­களும் மேலும் பல புதி­ய­வர்­களும் களத்தில் இறங்கி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தமது போரா­ட்­டத்தை மேலும் உத்­வே­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இதற்கு முஸ்­லிம்கள் தரப்பில் அண்­மையில் விடப்­பட்ட சில தவ­று­களும் கார­ண­மாக அமைந்­து­ள்­ளன என்­பதை மறுப்­ப­தற்­கில்­லை.

கடந்த சனிக்­கி­ழமை கண்­டியில் மிகத் தெளிவா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டம் எனக் குறிப்­பிட்டு பாரிய பேரணி ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

இதன் போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மிக மோச­மான கரு­த்­துக்கள் வெளியி­டப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வாசல் வீதி பெயர்ப்­ப­லகை இடித்துத் தள்­ளப்­பட்டு அதில் பௌத்த கொடி ஒன்று நடப்­பட்­டுள்­ளது.

மேலும் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களை பகிஷ்­­க­ரிக்கக் கோரி துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­ன.

குறித்த ஆர்ப்­பாட்டப் பேர­ணி கண்­டியில் முடி­வு­ற்ற அதே நேரம் பொர­லஸ்கமு­வ, பெப்­பி­லி­யா­னவில் அமைந்­துள்ள பெஷன் பக் தலை­மை­ய­கமும் அதன் களஞ்­சி­ய­சா­லையும் முற்­றாக தீயில் கருகியுள்­ள­து.

இத் தீ பர­வ­லுக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­டாத போதிலும் இன­வாத நோக்கம் கொண்ட தாக்­கு­த­லாக இருக்கக் கூடும் என்றே பர­­வ­லாக நம்­பப்­ப­டு­கி­றது.

தீ பரவிக் கொண்­டி­ருந்த சமயம் பொலிஸார் பல­வ­ந்­த­மாக சி.சி.ரி.வி. கமெரா பதிவு­களைப் பெற்றுச் சென்­றுள்­ள­மையும் சந்­தே­கத்தை தோற்­­று­வித்­துள்­ள­து.

இதே வர்த்­தக நிலை­யத்தை குறி­வைத்து கடந்த 2013 ஆம் ஆண்டும் பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் தாக்­குதல் மேற்­கொண்­ட­மையும் இதன்­போது தெளிவான ஆதா­ரங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட பிக்­குகள் பின்னர் அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களின் அழுத்­தங்­களால் விடு­விக்­கப்­பட்­ட­மையும் இல­குவில் மறந்­து­விடக் கூடி­ய­வை­யல்­ல.

இவ்­வா­றான பின்­ன­ணி­யில்தான் முஸ்லிம்கள் அர்ப்­ப­ணிப்­­புடன் ஆத­ர­வ­ளித்து ஆட்­சி­ய­ல­­மர்த்­திய இந்த அர­சாங்­கமும் தம்மைக் கைவிடத் தொடங்­கி­­விட்­ட­தா என்ற கவலை எழுந்­துள்­ளது.
 
இவ்­வா­று இனவாத சம்­ப­வங்கள் தொடர்­கின்ற போதிலும் அரசாங்கம் எந்­த­வித உறு­தி­யான நட­­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­காது வேடிக்கை பார்ப்­பது கவலைக்­கு­ரி­ய­­தா­கும்.

என­வேதான் அர­சாங்கம் இந்த இன­வாதக் கொட்­டத்தை அடக்க விரைந்து செயற்­பட வேண்டும். நடப்­ப­வைகள் நல்­ல­தற்­கல்ல என்­பது அர­சாங்­கத்­திற்கு நன்கு தெரியும். இதைத்­த­விர நாம் வேறொன்றும் சொல்­வ­தற்­கில்­லை.

(விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)

2 comments:

  1. கண்டிப்பாக அனீதி இளைக்கப்பட்டா ல் எதிர்ப்பை வெளியிடவேசெய்வோம், போறுமை, போராட்டம் இரண்டிற்குமே இஸ்லாம் முழுமயாக வழிகாட்டியுள்ளது...

    ReplyDelete
  2. ஆமாம் நடப்பவை நல்லதற்கல்ல , பேசாமல் ஒரு நாலு பிரியாணி சாப்பிட்டு விட்டு வேணுமண்டா ஒரு புர்தா கந்திரி , ஒரு பாத்திஹா ஓதி , 40 நாள் ஜமாத்லேம் போய் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம். உடஅனஏ அல்லாஹ் எங்களுக்கு எந்த கஷ்டமோ, சங்கடங்களோ தராமல் சொர்க்கம் ரெடி இப்ப நிம்மதியாக பொறுமையாக இருந்து தூங்கு எதிரிகள் என்ன செய்தாலும், திருப்பி எதுவும் செய்யவேண்டாம் பொறுமையை கடைபிடிங்க எல்லாம் அவன் பாத்துக்கொள்வான் என்றுதானே சொல்லியிருக்கிறான்?
    2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

    2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
    2:191. இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

    ReplyDelete

Powered by Blogger.