Header Ads



'இராணுவ சதிப்புரட்சியின் மூலம், இலங்கையில் எவரும் ஆட்சிக்கு வர முடியாது'

எவரோ ஒருவர் கூறுவது போல் இராணுவ சதிப்புரட்சியின் மூலம் இலங்கையில் எவரும் ஆட்சிக்கு வர முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இலங்கையில் இராணுவ சதிப்புரட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ் குணவர்தன போன்றவர்கள் அதற்கே ஆசைப்படுகின்றனர். அப்படி எதுவும் இலங்கையில் நடக்காது.

ஜனநாயக ரீதியாக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். இதனால், இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வர முடியுமா என்று இரவில் கனவு கண்டு வருகின்றனர். எனினும் அது கனவு மாத்திரமே எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

1 comment:

  1. ஏதோ ஒரு அறிக்கை விட்டதற்காக அஸாத் ஸாலியை சிறையிலிட்டார்கள்.
    தினேஷ் நாட்டுக்கே அச்சுறுத்தல் விடுக்கிறார். வேடிக்கை பார்க்கிறாங்களே

    ReplyDelete

Powered by Blogger.