Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு, நாமல் விடுத்துள்ள சவால்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சவால் விடும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மக்களை போன்று தெற்கு மக்களுக்கும் நில்வளா கங்கை திட்டம் மிகவும் முக்கியமான திட்டமாகும்.

அவ்வாறு முக்கியமான அந்த திட்டத்தை நிறுத்தியது மற்றும் பணத்தை கொள்ளையடித்தது யார்..? என்பதனை ஜனாதிபதி நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

நில்வளா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் அந்த திட்டத்தை செயற்படுத்திய அமைச்சு மற்றும் அமைச்சர், திட்டத்தை நிறுத்துவதற்கான காரணம் தொடர்பில் ஜனாதிபதி மக்கள் முன் அறிவிக்க வேண்டும் என நாமல் கூறியுள்ளார்.

சேறு பூசும் அரசியலை ஓரமாக வைத்து விட்டு உண்மை மற்றும் மக்கள்வாத அரசியல் நடத்துவதற்கு நாட்டு தலைவர்கள் செயற்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.