'பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகக் கூறி, பதவிக்குவந்த அரசு முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டது'
குருநாகல் நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் தெலியாகொன்ன ஜும்ஆ பள்ளிவாசல் இனந்தெரியாத நபர்களினால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.23 மணியளவில் கல்லெறிந்து தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவரினால் நள்ளிரவு 1.30 மணியளவில் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்படவே பொலிஸார் உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பள்ளிவாசல் சி.சி.ரி.வி. கமரா மற்றும் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளின் சி.சி.ரி.வி. கமரா பதிவுகளை பொலிஸார் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முஸ்லிம் முற்போக்கு முன்னணி கண்டனம்
பள்ளிவாசல் தாக்குதல் குறித்து முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.அஸ்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் ‘மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்கள்.
பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சமாதி கட்டுவதாகவும் நல்லாட்சியில் பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறி பதவிக்கு வந்தார்கள். ஆனால் இந்த நல்லாட்சியில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்பு பல பள்ளிவாசல்களுக்கெதிரான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகக் கூறி பதவிக்கு வந்த அரசு முஸ்லிம்களை ஏமாற்றி விட்டது. பள்ளிவாசல் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி உருவாகுவதற்கு பங்களிப்புச் செய்த முஸ்லிம்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்ய வேண்டும்’ என்றார்.
இதேவேளை சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சூழ்நிலைக்கேற்ப செயல்படும் இந்த கும்பல் நாட்டின் ஸ்த்திர தன்மைக்கு குந்தகம் விளைவிப்பவர்களே தவிர இனவாதிகள் அல்ல அதை வைத்து பிழைப்பு நடாத்துபவர்கள்..
ReplyDeleteAndru mahindawukku toppi potru ponnadai potru kurunakal palliyel waittu saththar pallihalukku yarum adikka willai. Muslimgale adiththu witru singalawar mail pali podappaduhiratu endru. Eppotum mahinda pinnal suththum aswer, saththar, mubarak maulavi pondrorin sathi yaha irukkalam inda palli halukku adippatu.arasangaththukku awappeyar wangi koduththu vittu mahinda pakkam muslingalai tiruppum oru seyal than inda vidayam.
ReplyDeleteஅதைப்பற்றி முஸ்லிம்கள் தானே கவலை பட வேண்டும்
ReplyDeleteஅதனைப் பற்றி பேசும் தகுதி உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு இல்லை... யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை... அல்லாவஹ்வின் பாதுகாப்பு எங்களுக்கு போதும்... இது உலக அழிவின் அடையாளங்கள்... உங்களைப் போன்று ஜால்ரா அடிக்கும் கும்பலை தலைவர்கள் ஆக்கியது எங்கள் மடமை. சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் அழிவு வெகு தொலைவில் இல்லை...
ReplyDeleteWhy not Mr. Aswer make his comments in English?
ReplyDeleteஏண்டா இனவாதி மஹிந்தவுக்கு வால்பிடிக்கும் பொறம் போக்கு முன்னணியின் செயலதிபர் முட்டாள் அஸ்வர்,
ReplyDeleteநீ சென்ற ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது பல பள்ளிகள் தகர்க்க பட்டு பல சொத்துக்கள் அளிக்கப்பட்டு சமூகத்தவர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டபோது கூட
நீ இப்படி கொதிக்கவில்லயே அது எண்டா மூதேவி இப்போது யாருக்காக டா
நீ இந்தக் கொத்தி கொதிக்கிறது சமுதாய பற்றா? இல்ல பதவி பற்றா?
முன்னைய சனாதிபதிர கொணாவ பிடிச்சிக்கி இருக்கக்கொள்ள வராத துணிச்சல் இப்ப வந்து என்னசெய்ய ???
ReplyDelete